சிங்கப்பூர், சார்ஜாவுக்கு டன் கணக்கில் பறக்கும் பலகாரம்

சிங்கப்பூர், சார்ஜாவுக்கு டன் கணக்கில் பறக்கும் பலகாரம்

1 mins read
99604354-bf72-4fcf-9a0d-f86fe5992946
அதிரசம், முறுக்கு உள்ளிட்ட பலகாரங்களும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகத் தகவல். படம்: தகவல் ஊடகம் -

கோவை: வரும் 24ஆம் தேதி தீபா­வ­ளித் திரு­நாள் கொண் டாடப்­பட உள்­ளது. இந்தத் திரு­நாளில் பல­கா­ரங்­க­ளுக்கு அதிக முக்­கி­யத்­து­வம் இருக்­கும்.

இதை­ய­டுத்து, கோவை­யில் இருந்து வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­லும் இரண்டு விமா­னங்­களில் இனிப்பு, காரம் உள்­ளிட்ட பலகாரங்­கள் ஏற்­று­மதி செய்­யப்பட்டு வரு­கின்­றன.

சிங்­கப்­பூ­ருக்கு ஸ்கூட் ஏர்­லைன்ஸ் மூலம் இரண்டு டன் இனிப்­பு­களும் சார்­ஜா­வுக்கு ஏர் அரே­பியா விமா­னம் மூலம் மூன்று டன் இனிப்­பு­களும் இன்றுமுதல் ஏற்­று­மதி செய்­வ­தற்குப் பதிவு செய்­யப்­பட்டு உள்­ள­தாகத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்த இனிப்­பு­கள் அனைத்­தும் இன்று சனிக்­கி­ழமை முதல் தின­மும் 200 முதல் 300 கிலோ வரை அனுப்பி வைக்­கப்­பட உள்­ளன. இதில் லட்டு, அல்வா, பால் இனிப்­பு­கள் உள்­ளிட்ட பல­கா­ரங்­கள் இருக்கும் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கோவை­யி­லி­ருந்து அனுப்­பப்­படும் இனிப்­பு­க­ளின் அளவு அதி­கம்.

ஆனால், இதை­விட சென்னை விமான நிலை­யத்­தில் இருந்து அதிக அள­வில் இனிப்­பு­கள் சிங்­கப்­பூ­ருக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட உள்­ள­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் குறிப்­பிட்­டுள்­ளன.