'பெற்றோருக்கும் பொறுப்பு இருக்கு'

'பெற்றோருக்கும் பொறுப்பு இருக்கு'

2 mins read
1242f4ad-763f-4470-9cef-718e03326ab6
-

சென்னை: ராயப்­பேட்­டை­யில் தொழி­லா­ளர் நலத்­துறை சார்­பில் நடை­பெற்ற இளை­ஞர்­க­ளுக்­கான வேலை வாய்ப்பு முகா­மில் கலந்து கொண்டு பேசிய முதல்­வர் ஸ்டா­லின், இளை­யர்­கள் திசை மாறிச் சென்­று­வி­டா­த­படி வளர்க்­கும் பொறுப்பு பெற்­றோர்­ க­ளுக்­கும் இருக்­கிறது என்று கூறி உள்­ளார்.

"ஒரு லட்­சம் வேலை வாய்ப்­புக்­கான உத்­த­ர­வைக் கொடுக்­கும் வாய்ப்பை எனக்கு வழங்­கி­யுள்­ளது பெரு­மை­யாக உள்­ளது. இதை­விட முத­ல்­வ­ருக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்­கப் போகிறது.

"சத்யா என்ற மாண­விக்கு நேர்ந்த துய­ரத்தை அறிந்து நான் நொறுங்கிப் போயுள்­ளேன். அதை அறிந்­த­வர்­கள் துய­ரத்­தில் இருப்­பார்­கள்.

"சில இளை­ஞர்­கள் என்ன மாதி­ரி­யாக வளர்­கி­றார்­கள் என்­பதை இந்­தச் சம்­ப­வம் காட்­டு­கிறது.

"இது­போன்ற சம்­ப­வங்­கள் இனி தமி­ழ­கத்­தில நிக­ழக் கூடாது. இது­வல்ல நாம் காண விரும்­பும் சமூ­கம், இனி எந்­தப் பெண்­ணுக்­கும் இது போன்று நிக­ழா­மல் தடுக்க வேண்­டிய கடமை ஒரு சமூ­க­மாக நமக்கு இருக்­கிறது.

"தங்­கள் பிள்­ளை­களை பெற்­றோர்­கள் அறி­வாற்­றல், தனித் திறமை­, சமூக நோக்­கம் கொண்­டவர்க­ளாக வளர்க்க வேண்­டும். பாட புத்­த­கக் கல்வி மட்­டு­மல்ல சமூக கல்­வி­யும் அவ­சி­ய­மா­னது.

"தன்­னைப் போலவே பிற உயி­ரை­யும் மதிக்க கற்­றுத் தர வேண்­டும். நல்­லொ­ழுக்­கப் பண்­பு கொண் ­ட­வர்களாக இளை­ஞர்­கள் வளர்ந்து வாழ்ந்து சமூ­கத்­திற்­கான பங்­க­ளிப்பை வழங்க வேண்­டும்.

"அவர்­கள் எந்த வகை­யி­லும் திசை மாறிச் சென்று விடா­த­படி வளர்க்க வேண்­டிய பெரும் பொறுப்பு பெற்­றோர்­க­ளுக்கு இருக்­கிறது.

"பள்ளி கல்­லூ­ரி­களும் பெற்­றோர்­களும் இளைய சக்­தியை பாது­காப்­பாக வளர்க்க வேண்­டும் என்று நான் கேட்­டுக் கொள்­கி­றேன்," என்று முதல்­வர் மு.க. ஸ்டா­லின் தெரி­வித்­தார்.

கடந்த வியா­ழக்­கி­ழமை சென்னை பரங்­கி­ம­லை­யில் ஓடும் ரயி­லி­லி­ருந்து 20 வயது மாணவி சத்யா கீழே தள்­ளப்­பட்டு கொல்­லப் பட்­டுள்­ளார்.

இந்தக் கொலை சம்­ப­வம் தொடர்­பில் 23 வயது சதீஷ் என்­ப­வரை காவ­லர்­கள் கைது செய்­துள்­ள­னர்.

சதீஷ் ஒருதலை­யாக சத்­யாவை காத­லித்து வந்­த­தா­க­வும் அதை ஏற்­றுக் கொள்­ளா­த­தால் சதீஷ், ரயி­லில் பய­ணம் செய்த சத்­யாவை கீழே தள்­ளி­விட்­ட­தா­க­வும் கூறப் படு­கிறது. இதில் மாணவி நசுங்கி உயி­ரிழந்தார்.