நீட் தேர்வு விலக்கு: ஸ்டாலின் நம்பிக்கை

நீட் தேர்வு விலக்கு: ஸ்டாலின் நம்பிக்கை

2 mins read
b4a0a53b-2b13-4b29-a939-161634ab61b3
-

சென்னை: நீட் தேர்­வில் இருந்து விலக்கு பெற முடி­யும் என்ற நம்­பிக்கை தமக்கு இருப்­ப­தாக முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

'உங்­களில் ஒரு­வன் பதில்­கள்' என்ற பெய­ரில் அவர் வெளி­யிட்­டுள்ள கேள்வி, பதில் வடி­வி­லான அறிக்­கை­யில், அடுத்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தமி­ழ­கம், புது­வை­யில் உள்ள 40 தொகு­தி­க­ளி­லும் திமுக கூட்­டணி வெற்றி பெற வேண்­டும் என்­பது தமது முதல் இலக்கு என அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இந்­தியா முழு­மைக்­கும் சமூ­க­நீ­தி­யில் கூட்­டாட்­சிக் கருத்­தி­ய­லில் நம்­பிக்கை கொண்ட ஆட்சி அமைய வேண்­டும் என்­பது நமது அடுத்த இலக்கு. இதற்­கான அர­சி­யல் நட­வ­டிக்­கைக­ளில் தேர்­தல் நேரத்­தில் இறங்­கு­வோம்," என்று முதல்­வர் ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

தமி­ழக மக்­க­ளுக்­காக திமுக அரசு பல்­வேறு திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்தி வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்­சி­யோடு பரப்­பப்­படும் அவ­தூ­று­கள், தம் காது­களை எட்­டுமே தவிர, அவற்றை தம் மன­துக்­குள் அனு­ம­திப்­பது கிடை­யாது என்று கூறி­யுள்­ளார்.

'மத்­திய பாஜக அரசு ஆளு­நரை வைத்து இரட்டை ஆட்சி நடத்­து­கி­றதா' என்ற கேள்­விக்­குப் பதி­ல­ளித்­துள்ள அவர், இது­போன்ற சூழ்­நி­லையை எதிர்­கொண்­டு­தான் ஆட்சி நடத்தி வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"நிய­ம­னப் பத­வி­யான ஆளு­ந­ருக்கு உரிய பொறுப்­பு­கள், அதி­கார வரம்­பு­கள் என்ன என்­ப­தை­யும் மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட முதல்­வ­ருக்கு உரிய கட­மை­கள், அதி­கார வரம்­பு­கள் என்ன என்­ப­தை­யும் நமது அர­சி­யல் சட்­டம் மிகத் தெளி­வா­கவே வரை­ய­றுத்­துக் கூறி­யுள்­ளது.

"அதைப் புரிந்து நடந்­து­கொண்­டால் யாருக்­கும் பிரச்­சினை இல்லை. தேவை­யற்ற சர்ச்­சை­க­ளுக்­கும் இடம் இருக்­காது," என்று ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னையை முழு­மை­யாக மீளுருவாக்­கம் செய்ய வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்ள அவர், அதற்­கான பெரும் பணி தற்­போது நடை­பெற்று வரு­கிறது என்­று கூறியுள்ளார்.

"நீட் தேர்­வில் இருந்து விலக்கு பெற முடி­யும் என்­கிற நம்­பிக்கை எனக்கு இருக்­கிறது. கால­தா­ம­தம் ஆவ­தா­லேயே நடக்­காது என்று முடி­வுக்கு வரா­தீர்­கள். நீட் தேர்வை வைத்து மிகக் கொடூ­ர­மான சமூக அநீ­தியை இழைத்­துக்கொண்டு இருக்­கிறது பாஜக. எதிர்­வ­ரும் நாடா­ளு­மன்­றத் தேர்­தல் அக்­கட்­சிக்கு பாடம் புகட்­டு­வ­தாக அமை­யும்," என்று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கூறி­யுள்­ளார்.