அதிகரிக்கும் போலி மருத்துவர்கள்: சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை

1 mins read
b1c0d15a-e44a-4249-a99f-0cd3c2123e41
-

மதுரை: போலி மருத்­து­வர்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என தமிழ்­நாடு மருத்­துவ மன்ற தலை­வர் டாக்­டர் க.செந்­தில் எச்­ச­ரித்­துள்­ளார்.

மது­ரை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், மருத்­துவ மன்­றத்­தில் பதிவு செய்­யா­மல் அலோ­பதி மருத்­து­வச் சிகிச்சை அளிக்­கும் போலி மருத்­து­வர்­கள் மீது சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்க உரிய ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

"போலி மருத்­து­வர்­கள் ஒழிப்பு சட்­டப்­பி­ரி­வி­ன­ரு­டன் ஆலோ­சித்து வரு­கி­றோம். பல போலி மருத்­து­வர்­கள் ஊட­கங்­கள் வழி­யாக விளம்­ப­ரங்­கள் செய்து தவ­றான சிகிச்சை அளித்து ஏமாற்­று­கின்­ற­னர். எனவே, மாவட்­டந்­தோ­றும் போலி மருத்­து­வர்­கள் குறித்த புகார்­களை விசா­ரிக்க கூடு­த­லாக அலு­வ­லர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வர்.

"இந்த சட்­டத்­தின்­படி குற்­றம் நிரூ­பிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு நீதி­மன்­றம் ஓராண்டு சிறைத் தண்­டனை அல்­லது ரூ.5 லட்­சம் அப­ரா­தம் அல்­லது இரண்­டும் சேர்த்து தண்­ட­னை­யாக வழங்க முடி­யும்.

"போலி மருத்­து­வர்­க­ளைக் கண்­ட­றி­வ­தில் பொது­மக்­களும் எங்­க­ளுக்கு உத­வி­க­ர­மாக இருக்க வேண்­டும்," என்­றார் மருத்­து­வர் செல்­வம்.

கடந்த மாதம் உரிய பதிவு இன்றி எலும்பு நோய்க்­கும் இதய நோய்க்­கும் சிகிச்சை அளித்த இரண்டு போலி மருத்­து­வர்­கள் மீது வழக்கு தொடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் மேலும் தெரி­வித்­தார்.

மேலும், பல்­வேறு மாவட்­டங்­களில் போலி மருத்­து­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.