உலக ஒற்றுமையை வலியுறுத்தி சேலத்தில் 1,500 மாணவிகள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி பலரையும் வெகுவாகக் கவர்ந்தது. 75வது சுதந்திர தின விழா நிறைவையும் ஒட்டி நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவிகள் பாரதியார் பாடலுக்கு நடனமாடி பாராட்டு பெற்றனர். மேலும், அனைத்து மாணவிகளும் மூவண்ணச் சீருடை அணிந்து, ஒரே நேரத்தில் பாரதியார் பாடலுக்கு தொடர்ந்து ஆறு நிமிடங்கள் நடனமாடினர்.
படம்: ஊடகம்

