ஊழியர்களுக்கு ரூ.1.20 கோடியில் மோட்டார் சைக்கிள், கார்களை தீபாவளிப் பரிசாக வழங்கிய நகைக்கடை உரிமையாளர்

ஊழியர்களுக்கு ரூ.1.20 கோடியில் மோட்டார் சைக்கிள், கார்களை தீபாவளிப் பரிசாக வழங்கிய நகைக்கடை உரிமையாளர்

2 mins read
55e61ab6-5300-4f5c-b779-7050362b7eee
கடை உரிமையாளரிடம் (நடுவில்) இருந்து வாகனப் பரிசுக்கான அடை யாளச் சான்று பெறும் ஊழியரின் குடும்பத்தினர். படம்: ஊடகம் -

சென்னை: சென்­னை­யைச் சேர்ந்த நகைக்­கடை உரி­மை­யா­ளரான ஜெயந்தி லால் சலானி என்பவர், தனது கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார்களையும் மோட்­டார் சைக்­கிள்களையும் தீபா­வ­ளிப் பரி­சாக வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

சென்­னை­யில் உள்ள சலானி ஜூவல்­லரி மார்ட் நகைக்­கடையின் உரி­மை­யா­ளரான ஜெயந்தி லால், ஒரு கோடியே 20 லட்­சம் ரூபாய் செலவில் அன்பளிப்புகளை வழங்கி உள்ளார்.

தனது கடை­யில் பணி­யாற்­றும் 10 ஊழியர்களுக்கு காரும் 20 ஊழியர்களுக்கு மோட்­டார் சைக்­கி­ளையும் அவர் பரிசளித்துள்ளார்.

இதுகுறித்து ஜெயந்தி லால் சலானி செய்தியாளர்களிடம் கூறு­கை­யில் "என் வாழ்க்­கை­யின் கடி­ன­மான கால­கட்­டத்­தி­லும் உயர்­வி­லும் என்­ ஊழி­யர்­கள் எனக்கு ஆத­ர­வாக இருந்­தனர். என் ஊழி­யர்­கள் என்­ப­வர்­கள் எனக்கு இரண்டாவது குடும்­பம் போன்றவர்கள்.

"எனது தீபா­வ­ளிப் ­ப­ரி­சால் என் ஊழியர்கள் மேலும் ஊக்­க­ம­டை­வார்­கள், அவர்­க­ளுக்கு நிச்­ச­ய­மாக சிறப்­பான நாளாக வரும் தீபாவளி அமையும்.

"கடி­ன­மாக உழைத்து நான் லாபம் ஈட்­டு­வ­தற்கு உத­வியவர்கள் என் ஊழி­யர்­கள் மட்­டு­மல்ல, என் குடும்­பத்­தில் ஒரு­வராக நினைப்ப தால் பரிசை வழங்­கியுள்ளேன்.

"என்னைப் போலவே ஒவ்­வொரு கடை உரி­மை­யா­ள­ரும் தனது ஊழி­யரை மதித்து, அவர்­க­ளுக்கு ஏதா­வது பரிசு வழங்­கிட வேண்­டும்" எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

என்­ ஊழி­யர்­களை நான் ஊழியர்களாகப் பார்ப்பதில்லை. அவர்களையும் என் குடும்ப உறுப்பினராகவே பார்க்கிறேன். என் குடும்பத்தினருக்கு

வழங்­கு­வ­து போலவே

அவர்க­ளுக்­கும்

தீபா­வ­ளிப்­ பரிசு வழங்­கி­னேன்.

நகைக்­கடை உரி­மை­யா­ளர்

ஜெயந்தி லால் சலானி