சுவரில் சிக்கிக்கொண்டு பரிதவித்த நாய் மீட்பு

சுவரில் சிக்கிக்கொண்டு பரிதவித்த நாய் மீட்பு

1 mins read
fa011401-38eb-4838-993a-fff87786c363
படம்: ஊடகம் -

கன்­னி­யா­கு­மரி: கன்­னி­யா­கு­மரி மாவட்­டம், கொட்­டா­ரம் அருகே உள்ள லெட்­சு­மி­பு­ரம் பகு­தி­யில் நாய் ஒன்று சுவ­ரின் துவா­ரத்­தில் சிக்­கிக் கொண்டு விடி­ய­வி­டிய வலி­யு­டன் துடித்த நிலை­யில், தீய­ணைப்­புப் படை­யி­ன­ரின் உத­வி­யு­டன் மீட்­கப் பட்­டது.

லெட்­சு­மி­பு­ரத்­தில் பிர­தாப் என்ப வர் வசித்து வரு­கி­றார். அவ­ரது வீட்­டுக்­குள் நேற்று முன்­தி­னம் இரவு பசி­யு­டன் இருந்த நாய் ஒன்று நுழைந்­துள்­ளது.

ஆனால், அதற்கு தீனி எது­வும் கிடைக்­கா­த­தால், வெளியே செல்ல வழி­யைத் தேடி­ய­போது அதன் கண்­ணில் வீட்­டின் சுற்­றுச்­சு­வ­ரில் இருந்த துவா­ரம் தென்­பட்­டது.

அதன்­வ­ழி­யாக வெளியே சென்று­வி­ட­லாம் என நினைத்து தலையை நுழைத்­துள்­ளது. ஆனால், தான் நினைத்­த­படி தப்ப முடி­யா­மல் விழி பிதுங்கி நின்­றது.

அதன் தலை சுவ­ருக்கு வெளி­யி­லும் கழுத்­துப் பகுதி துவாரத்­திலும் சிக்­கிக்­கொண்­டது.

இத­னால் முன்­னோக்­கிச் செல்ல முடி­யா­ம­லும் தலையை பின்­னோக்கி இழுக்க முடி­யா­ம­லும் அவ­திப்­பட்­டது. ஒரு­ச­ம­யத்­தில் தலையை உள்ளே இழுக்க முயற்சி செய்த­தில் கழுத்­தில் காயம் ஏற்­பட்டு ரத்­தம் வடிந்­தது. இத­னால், தப்­ப வழி யின்றி இரவு முழு­வ­தும் தவித்­தது.

நேற்று காலை தூங்கி எழுந்து வெளியே வந்த பிர­தாப், நாய் சுவ­ரில் சிக்­கி­யி­ருப்­ப­தைக் கண்டு அதிர்ச்சி அடைந்­தார். அவ­ரால் நாயை மீட்கமுடி­யா­மல், தீய­ணைப்­புப் படை­யி­னரின் உதவியுடன் சுவ­ரின் துவாரத்தை சற்று பெரி­தாக்கி நாயை மீட்­ட­னர்.