சிவாஜி குடும்பத்தில் சொத்துத் தகராறு: அண்ணன்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சிவாஜி குடும்பத்தில் சொத்துத் தகராறு: அண்ணன்களுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

2 mins read
14c3bbe2-4325-41b9-b61f-99b489b11dfd
சிவாஜி கணே சனின் குடும்பத் தினர்.படம்: ஊடகம் -

சென்னை: மறைந்த நடி­கர் தில­கம் சிவாஜிகணே­ச­னின் சொத்­து­கள் விற்­பனை தொடர்­பாக நடி­கர்­கள் பிரபு, ராம்­கு­மா­ருக்கு எதி­ராக அவ­ரது சகோ­த­ரி­கள் தொடர்ந்த கூடு­தல் மனுக்­களைச் சென்னை உயர் நீதி­மன்­றம் நேற்று தள்­ளு­படி செய்து உத்­த­ர­விட்­டது.

சிவா­ஜி­க­ணே­சன் மகள்­கள் சாந்தி, ராஜ்வி ஆகியோர் சார்­பில் சாந்தி திரை­ய­ரங்கின் பங்கு, சொத்­து­களை விற்­பனை செய்­யும் நட­வடிக்­கை­களில் 'அக்சயா ஹோம்ஸ் ரியல் எஸ்­டேட்' நிறு­வ­ன­மும் தங்­களது சகோ­த­ரர்­கள் பிரபு, ராம்­குமார் தரப்பும் ஈடு­ப­ட்டு வருவதாக­வும் முக்­கிய வழக்கை விசா­ரித்து முடிக்­கும்வரை இந்த சொத்து விற்­ப­னைக்கு இடைக்­காலத் தடைவிதிக்­க­வேண்­டும் என்­றும் வாதி­டப்­பட்­டது.

பிரபு, ராம்­கு­மார் தரப்­பில் மூத்த வழக்­க­றி­ஞர் பி.எஸ்.ராமன் முன்னி லையாகி, திரை­ய­ரங்க விவ­கா­ரத்­தில் அனைத்து நடை­மு­றை­களும் ஏற்­கெ­னவே முடிந்­து­விட்ட நிலை­யில், தற்­போது இவ்வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி விக்­கப்­பட்­டது.

அதே­போல் கட்­டு­மான நிறு வனம் சார்­பில், சாந்தி திரை­ய­ரங்­கப் பங்­கு­கள் முழு­வ­தும் 2010ஆம் ஆண்­டி­லேயே கைமா­றி­விட்டதாக­வும் கட்­டு­மா­னப் பணி­கள் முடிந்­த­பி­ன்னர் குடும்­பப் பிரச்­சினை கார­ண­மாக இவ்­வ­ழக்கு தொட­ரப்­பட்­ட­தா­க­வும் வாதிடப்­பட்­டது.

இம்மூன்று தரப்பு வாதங்களை­யும் கேட்ட நீதி­பதி கிருஷ்­ணன் ராம­சாமி, தேதி குறிப்­பி­டா­மல் தீர்ப்பை ஒத்திவைத்­தி­ருந்­த நிலை யில், சாந்தி, ராஜ்வி தொடர்ந்த இடைக்­கால வழக்­கின் மனுக்­களைத் தள்­ளு­படி செய்து நேற்று நீதி­பதி உத்­த­ர­விட்டார்.

அதே­ச­ம­யம் சொத்து தொடர் பான முக்­கிய வழக்­கு­கள் இன்­னும் நிலு­வை­யில்­ உள்ளதாகவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தங்­கள் தந்­தை­யின் ரூ.270 கோடி மதிப்­புள்ள சொத்­து­களில் சகோ­த­ரா்­கள் ராம்­குமாா், பிரபு ஆகியோா் தங்­க­ளுக்­கும் சரி விகிதத்தில் பங்கு கொடுக்­கா­மல் ஏமாற்றி விட்டனர் என்றும் சொத்துகளைத் தங்­க­ளுக்­கும் பிரித்து வழங்கும்படி உத்­த­ர­வி­டக் கோரியும் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் சாந்தி, ராஜ்வி ஆகியோா் மனுத்தாக்­கல் செய்­தி­ருந்­த­னர்.