பூந்தமல்லி: வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்புத் தடுப்பின் மீது மோதி, அந்தரத்தில் பறந்து அங்கிருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்தனர்.
விபத்தில் சிக்கியவர்கள் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு என்பதும் சகோதரர்களான இருவரும் அதிமுகவைச் சேர்ந்த தொழிலதிபர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்களுடன் சுதாகர் என்பவரும் உயிரிழந்தார்.
விபத்தில் படுகாயம் அடைந்த இருவர் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து குறித்து பூந்தமல்லி காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

