மாவட்ட ஆட்சியர், 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை

2 mins read
8ef4a69e-23ca-407f-bd44-024de8b7bbaf
ஓய்வுபெற்ற நீதி­பதி அருணா ஜெகதீசன். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்தை நிலை குலைய வைத்த தூத்­துக்­குடி துப்­பாக்­கிச்­சூடு சம்­ப­வம் தொடர்­பாக, ஓய்வுபெற்ற உயர் நீதி­மன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலை­மை­யிலான ஒரு­ந­பர் ஆணை­யக் குழு நேற்று நடை­பெற்ற சட்­ட­ச­பைக் கூட்­டத்­தொடரில் அறிக்கையைத் தாக்­கல் செய்­தது.

அதில், சம்­ப­வம் நிகழ்ந்த­போது மாவட்ட ஆட்­சி­ய­ராக இருந்­த­வர் மீதும் மூன்று வரு­வாய்த்­துறை அலு­வ­லர்­கள் மீதும் துறை ரீதி யிலான நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­குப் பரிந்­துரை செய்­துள்­ளது.

அத்­து­டன், சம்­ப­வத்­தின்­போது துப்­பாக்­கிச்­சூடு நடத்­திய 17 காவலர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்­க­வும் அருணா ஜெக­தீ­சன் ஆணை­யம் பரிந்­து­ரைத்­துள்­ளது.

தூத்­துக்­கு­டி­யில் செயல்­பட்டு வந்த ஸ்டெர்­லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018, மே மாதம் 22ஆம் தேதி போராட்­டம் நடந்­தது.

அந்­தப் போராட்­டம் வன்­மு­றை­யாக மாறிய நிலை­யில், காவல்­துறை­யி­னர் கண்­மூ­டித்­த­ன­மாக நடத்­திய துப்­பாக்­கிச்­சூட்­டில் 13 பேர் உயிரிழந்­த­னர். நூற்­றுக்­கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­னர்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக அருணா ஜெக­தீ­சன் தலைமை யிலான ஒரு­ந­பர் ஆணை­யம் விசா ரணை நடத்தி, அறிக்­கையை நேற்று நடை­பெற்ற சட்­ட­ச­பைக் கூட்­டத்­தில் தாக்­கல் செய்­தது.

துப்­பாக்­கிச்­சூடு சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் உற­வி­னர்­கள், சட்­ட­பூர்வ வாரிசுகளுக்கு ரூ.50 லட்­சமும் காய­மடைந்­த­வர்­க­ளுக்கு ரூ.10 லட்­சமும் இழப்­பீடாக வழங்­க­வும் ஆணை­யம் பரிந்­து­ரைத்­துள்­ளது.

விசா­ர­ணை­யில் காவல்­துறை யினர் தங்­க­ளது வரம்­பு­களை மீறி செயல்­பட்­டுள்­ள­தாகவும் போராட்­டத்தை மாவட்ட ஆட்­சி­யர் மிக அலட்­சி­ய­மாக அணு­கி­யுள்­ள­தா­க­வும் ஆணை­யம் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களில் ஐவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுட் டுக்கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அருணா ஜெகதீசன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை எனவும் கலவரம் நடந்துகொண்டிருந்த போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் காவல் ஆய்வாளரும் ஊரில் இல்லை எனவும் அருணா ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.