மதுரை ஆட்சியரிடம் பதக்கங்களை ஒப்படைக்க வந்த வீராங்கனைகள்

மதுரை ஆட்சியரிடம் பதக்கங்களை ஒப்படைக்க வந்த வீராங்கனைகள்

2 mins read
394f029c-0d1d-4cfe-9be7-0bb950fe8203
அனைத்துலகப் போட்டிகளில் தாங்கள் வென்ற பதக்கங்களை மதுரை ஆட்சியரிடம் ஒப்படைக்க வந்த வீராங்கனை கள் சங்கீதா, தீபா (வலது). படம்: ஊடகம் -

மதுரை: மது­ரை­யைச் சேர்ந்த மாற்­றுத்­தி­ற­னாளி வீராங்­க­னை­க­ளான சங்­கீதா, தீபா இரு­வ­ரும் அனைத்­து­லக அள­வில் போட்­டி­கள் பல­வற்­றில் கலந்­து­கொண்டு பதக்­கங்­களைக் குவித்­துள்­ள­னர்.

ஆனால், இத்­தனை பதக்­கங் களைக் குவித்­தும் தங்­க­ளுக்­கான வேலை இது­வரை கிடைக்­கா­த­தால் வருத்­தத்­தில் இருந்­த­னர்.

இதை­ய­டுத்து, "நாங்­கள் பெற்ற பதக்­கங்­கள் எது­வுமே எங்­க­ளுக்கு வேண்­டாம்," எனக் கூறி அவற்றை மதுரை மாவட்ட ஆட்­சி­யர் அனீஷ் சேக­ரி­டம் ஒப்­ப­டைக்க வந்­த­னர்.

ஆனால், கிராம உத­வி­யா­ளர் பணி­யைப் பெறு­வ­தற்கு விண்­ணப்­பிக்­கும்­படி ஆட்­சி­யர் அறி­வு­றுத்தி யதை அடுத்து, இரு வீராங்­கனை களும் தங்­க­ளது பதங்­கங்­களை ஒப்­ப­டைக்­கா­மல் திரும்­பி­விட்­ட­தாகக் கூறி­யுள்­ள­னர்.

மதுரை கூட­ல­ழ­கர் பெரு­மாள் கோவில் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் சங்­கீதா, 40. இரு கால்­களும் செய லிழந்த மாற்­றுத் திற­னாளி. இவர், லண்­டன், துபாய், சீனா­வின் பெய்­ஜிங், ஜோர்­டான் ஆகிய இடங்­களில் நடந்த மேசைப்­பந்து போட்டி கள், மாநில, தேசிய, அனைத்­து­ல­கப் போட்­டி­க­ளி­லும் பங்­கேற்று 40க்கும் மேற்­பட்ட பதக்­கங்­க­ளைப் பெற்­றுள்­ளார்.

அதே­போல், மதுரை எல்­லீஸ் நக­ரைச் சேர்ந்­த­வர் தீபா, 40. போலி­யோ­வால் பாதிக்­கப்­பட்ட மாற்­றுத் திற­னாளி. இவ­ரும் பூப்­பந்து உலகக் கிண்ணத்தில் இரண்டு வெள்ளி, பெல்­ஜி­யம் தட­க­ளப் போட்­டி­யில் ஒரு வெள்ளி, இரண்டு வெண்­க­லம், ஜெர்­மனி தட­க­ளப் போட்­டி­யில் இரண்டு வெண்­க­லம் உள்­ளிட்ட பதக்­கங்களை வென்­றுள்­ளார்.

2010ல் வீர­தீ­ரச் செய­லுக்­காக மாநில அர­சின் 'கல்­பனா சாவ்லா' விரு­தை­யும் பெற்­றுள்­ளார்.

இரு­வ­ரும் கடந்த 20 ஆண்­டு­களாக அனைத்­து­ல­கப் போட்­டி­களில் ஜொலித்­தும் இது­வரை வேலை­வாய்ப்பு கிட்­டா­மல் கடைசி யாக ஆட்சியரை நாடித் தீர்வு கண்டுள்­ள­னர்.