இந்தி திணிப்புக்கு எதிராக தனித் தீர்மானம் சட்டசபைத் தொடரில் நிறைவேற்றிய ஸ்டாலின்

2 mins read
b576ce14-d4bf-4ec1-a1ba-888197a7b3ee
-

சென்னை: மத்­திய அர­சின் இந்தி திணிப்பு நட­வ­டிக்­கைக்கு எதிர்ப்பு தெரி­வித்து, தமி­ழக சட்­டப் பேரவை­யில் நேற்று தனித் தீர்­மா­னத்தை முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கொண்டு வந்­தார்.

இந்­தியை அலு­வல் மொழி­யாக மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா தலை­மை­யி­லான குழு அண்­மை­யில் பரிந்­துரை செய்­தி­ருந்­தது.

இதனை அமல்­ப­டுத்­தக்­கூ­டாது என்­பதை வலி­யு­றுத்­தும் வித­மாக பிர­த­மர் நரேந்­திர மோடிக்கு முதல்­வர் மு.க.ஸ்டா­லின் ஏற்­கெ­னவே கடி­தம் எழு­தி­யி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், நேற்று இரண்­டா­வது நாளா­கத் தொடர்ந்த சட்­ட­மன்­றக் கூட்­டத்­தொ­ட­ரில் இந்தி திணிப்­புக்கு எதி­ராக தீர்­மா­னம் முன்­மொ­ழி­யப்­பட்­டது.

இது­கு­றித்து மு.க. ஸ்டா­லின் பேசு­கை­யில், "முழுக்க முழுக்க இந்­திக்­கா­கவே பாஜக அர­சின் இத­யம் துடிக்­கிறது.

"இந்தி தெரி­யா­த­வர்­கள் மத்திய அர­சின் பணி­யில் அமர முடி­யாத வகை­யில் அவர்­க­ளது இந்தி திணிப்­புக் கொள்கை உள்­ளது. ஆங்­கி­லத்தை மொத்­த­மாக அகற்­ற­வும் பாஜக அரசு முயற்சி செய்து வரு­கிறது.

"ஆங்­கி­லத்தை அகற்­று­வ­தற்கு பின்­னால் இந்­தியை அம­ர­வைக்­கும் எண்­ணம்­தான் அவர்­க­ளி­டம் உள்­ளது.

"இந்­திக்கு தாய்ப்­பா­லும் இந்­தி­யா­வின் மற்ற மொழி­க­ளுக்கு கள்­ளிப்­பா­லும் புகட்ட நினைப்­பது இந்­திய அர­சி­யல் சட்­டத்­திற்கு எதி­ரா­னது," என்­றும் சாடியுள்­ளார்.

"தமிழ்­நாட்­டின் மொழிக்­கொள்கை என்­பது தமி­ழ், ஆங்­கிலம் என்ற இருமொழிக் ­கொள் கையே.

"தமிழ்­மொழி உள்­ளிட்ட மாநில ஆட்சி மொழி­கள் அனைத்­தும் இந்­திய அர­சின் ஆட்சி மொழி­யா­க­வேண்­டும். இந்தி பேசாத மாநி­லங்­கள் மீது இந்தி மொழியை எவ்­வ­கை­யி­லும் திணிக்­கக் கூடாது.

"இந்­தி­யா­வில் இந்தி மொழியை திணிப்­ப­தையே மத்­திய அரசு தனது வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளது," என சுட்­டிக் காட்­டி­யுள்ள ஸ்டா­லின், ஒரே நாடு ஒரே மொழி என்ற பெய­ரில் மற்ற தேசிய மொழி­களை அழிக்க முயற்சி செய்­வ­தா­க­வும் ஆட்­சிக்கு வந்­த­தன் நோக்­கமே இந்தி திணிப்­புக்­குத்­தான் என்று பாஜக நினைப்­ப­தா­க­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.