தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: உள்துறை செயல்பாடு குறித்து விசாரிக்க முத்தரசன் வலியுறுத்து

2 mins read
2ae9472b-f2ac-4614-8b75-4cb1ea8a40c0
தூத்துக்குடி கலவரக் காட்சி. கோப்புப்படம்: ஊடகம் -

சென்னை: தூத்­துக்­குடி துப்­பாக்­கிச் சூடு தொடர்­பான விசா­ரணை ஆணைய அறிக்­கையை தமி­ழக அரசு தாம­த­மின்றி சட்­டப்­பே­ர­வை­யில் தாக்­கல் செய்­தி­ருப்­பதை வர­வேற்­ப­தாக இந்­தி­ய கம்­யூ­னிஸ்ட் கட்சி தெரி­வித்­துள்­ளது.

துப்­பாக்­கிச் சூடு சம்­ப­வத்­தின்­போது அப்­போ­தைய மாநில உள்­துறையின் செயல்­பாடு குறித்து, விசா­ரிக்க வேண்­டும் என்று அக்­கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ளர் முத்­த­ர­சன் வலி­யு­றுத்தி உள்­ளார்.

மேலும், இது தொடர்­பாக அவர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், உள்­துறை நிர்­வா­கத்­தின் தலைமை அதி­கா­ரி­கள் செயல்­பட்ட விதம் குறித்­தும் கேள்வி எழுப்பி உள்­ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு தூத்­துக்­குடி ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ரா­கப் பல்­வேறு அமைப்­பு­கள் ஒருங்­கி­ணைந்து தொடர் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­போது, நூறா­வது நாளன்று பொதுமக்­கள் மீது காவல் துறை நடத்­திய துப்­பாக்கி சூட்டில் பள்ளி மாணவி உட்­பட 14 பேர் கொல்­லப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­டுள்ள முத்­த­ர­சன், இச்­சம்­ப­வத்­தின்­போது நூற்­றுக் கணக்­கானோர் படு­கா­ய­ம­டைந்­த­னர் என்­றும் காவல்­துறை தரப்­பில் ஒரே ஒரு­வர் மட்­டும் காய­ம­டைந்­தார் என்­றும் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.

"ஸ்டெர்­லைட் துப்­பாக்கிச் சூடு சம்­ப­வத்தை விசா­ரித்த ஆணை­யம் காவல் துறை­யின் வரம்­பு ­மீ­றிய செய­லை­யும் மாவட்ட நிர்­வா­கத்­தின் அலட்­சி­யத்­தை­யும் உறுதி செய்து, அதற்கு கார­ண­மா­ன­வர்­கள் மீது துறை சார்ந்த நட­வடிக்கை எடுக்க வேண்­டும் எனப் பரிந்­து­ரைத்­துள்­ளது.

"மக்­கள் பிர­தி­நி­தித்­துவ ஆட்சி முறை­யில் உள்­துறை நிர்­வா­கத்­திற்கு பொறுப்­பான முதல்­வ­ரும் அமைச்­ச­ர­வை­யும் பெரும் முத­லீட்­டில் இயங்கி வந்த ஸ்டெர்­லைட் ஆலை­யின் எதிர்­வி­ளை­வு­கள் குறித்து பரி­சீ­லித்­தார்­களா? மக்கள் நலன் கருத்­தில் கொள்­ளப்­பட்­டதா?" என முத்­த­ர­சன் பல்­வேறு கேள்­வி­களை எழுப்பி உள்­ளார்.

உள்­துறை தலை­மை­யின் வழி­காட்­டல் இல்­லா­மல், உள்­ளூர் மட்ட காவல்­து­றை­யி­னர் அதி­கார அத்து­மீ­ற­லில் ஈடு­பட்­டார்­களா என்­றும் குடி­மக்­கள் 14 பேர் கொல்­லப்­பட்ட சம்­பவத்­திற்கு கார­ண­மா­ன­வர்­கள் மீது குற்­ற­வி­யல் சட்­டங்­க­ளின் கீழ் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா? என்­றும் கேட்­டுள்ள முத்­த­ர­சன் இது­போன்ற வினாக்­க­ளுக்கு ஆணைய அறிக்­கை­யில் விளக்கம் ஏது­மில்லை எனத் தெரி­வித்­துள்ளார்.

காய­ம­டைந்­தோர் குடும்­பங்­களில் தலா ஒரு­வ­ருக்கு அர­சின் நிரந்­த­ரப் பணி­யி­டத்­தில் பணி நிய­ம­னம் வழங்க வேண்­டும் என்­பது உள்­பட, நீதி­பதி அருணா ஜெக­தீ­சன் விசா­ரணை ஆணை­யத்­தின் பரிந்­து­ரை­களை தமி­ழக அரசு முழுமையாக ஏற்க வேண்­டும் என­வும் முத்­த­ர­சன் வலி­யுறுத்தி உள்­ளார்.