தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தித் திணிப்பு: கொந்தளித்த கல்லூரி மாணவர்கள்

1 mins read
880b4f8f-ff38-4e7b-96fc-932011386bf0
-

தூத்­துக்­குடி: தமி­ழ­கத்­தில் இந்­தித் திணிப்­புக்கு எதி­ரான போராட்­டம் வலுத்து வரு­கிறது. நேற்று தூத்­துக்­கு­டி­யில் நடை­பெற்ற போராட்­டத்­தில் ஆயி­ரக்­க­ணக்­கான கல்­லூரி மாண­வர்­கள் பங்­கேற்­ற­னர்.

வகுப்­பு­க­ளைப் புறக்­க­ணித்த பெரும்­பா­லான மாண­வர்­கள், இந்தித் திணிப்பை எந்த வகையி­லும் ஏற்க இய­லாது எனத் திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­த­னர்.

நாட்­டில் உள்ள உயர் கல்வி நிலை­யங்­களில் இந்­தி­யைப் பயிற்று மொழி­யாக அறி­விப்­பது, மத்­திய அர­சின் பணி­யி­டங்­க­ளுக்­கான போட்டித் தேர்­வு­களில் ஆங்கிலத்தை நீக்­கி­விட்டு இந்தி­யில் மட்­டுமே தேர்வு எழுத வேண்­டும் என்று அறி­விப்­பது உள்­ளிட்ட பல்­வேறு பரிந்­து­ரை­களை உள்­துறை அமைச்­சர் அமித்ஷா தலை­மை­யி­லான நாடா­ளு­மன்ற நிலைக்­குழு முன் வைத்­துள்­ளது. இதற்கு அதி­ப­ரின் ஒப்­பு­த­லைப் பெறும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து தென்மாநி­லங்­களில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது. தமி­ழ­கம், தெலுங்­கானா, கேரளா, மேற்கு வங்­கம் உள்­ளிட்ட மாநி­லங்­க­ளைச் சேர்ந்த சமூக ஆர்­வ­லர்­கள், அர­சி­யல் தலை­வர்­கள், மாண­வர்­கள் எனப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் இந்­தித் திணிப்புக்கு எதிராக போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் இந்­திய மாண­வர் சங்­கத்­தி­னர் நேற்று தூத்துக்குடி­யில் இந்தித் திணிப்­பிற்கு எதி­ராகப் போராட்­டத்­தில் ஈடுப்­பட்­ட­னர். அப்­போது மத்­திய அர­சுக்கு எதி­ராகவும் இந்தித் திணிப்பை எதிர்த்­தும் முழக்­கங்­கள் எழுப்­பப்­பட்­டன. இதில் ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட மாண­வர்­கள் பங்­கேற்­ற­னர். இதற்கிடையே இந்தித் திணிப்புக்கு எதிராக திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் நேற்று வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.