கல்லூரி மாணவிகளுக்கு உதவ 'போலிஸ் அக்கா' திட்டம்

கல்லூரி மாணவிகளுக்கு உதவ 'போலிஸ் அக்கா' திட்டம்

2 mins read
5f97eecf-c563-48c0-b752-b56c128fdbd6
-

பெண் காவலர்களிடம் மனம்விட்டுப் பேசலாம்; முதற்கட்டமாக கோவையில் அறிமுகம்

சென்னை: கல்­லூரி மாண­வி­கள் எதிர்­கொள்­ளும் பல்­வேறு பிரச்சினை­க­ளுக்­குத் தீர்வு காணும் வகை­யில் 'போலிஸ் அக்கா' என்ற புதிய திட்­டத்தை தமி­ழ­கக் காவல்­துறை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.

முதற்­கட்­ட­மாக, கோவை மாநகரில் இத்­திட்­டம் செயல்­பாட்­டுக்கு வந்­துள்­ளது.

கோவை­யில் ஏரா­ள­மான கல்­லூ­ரி­கள் இயங்கி வரு­வ­தா­லும் அண்டை மாநி­லங்­க­ளைச் சேர்ந்த இளம் மாண­வி­கள் அங்கு தங்கி படிப்­ப­தா­லும், இத்திட்­டம் அறி­மு­க­மாகி உள்­ள­தாக காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

"தமி­ழ­கத்­தில் கல்­லூரி மாண­வி­கள் உள­வி­யல், பாலி­யல் ரீதி­யில் பல்­வேறு வகை­யான பிரச்­சி­னை­களை எதிர்­கொண்­டுள்­ள­னர். எனி­னும் அவை குறித்து யாரி­ட­மும் வெளிப்­ப­டை­யா­கப் பேச முடி­யாத சூழல் பல­ருக்கு ஏற்­படு­கிறது.

பெற்­றோர், தோழி­கள், கல்­லூரி நிர்­வா­கம் என்று யாரி­ட­மும் கலந்­தா­லோ­சிக்க இய­லா­மல், மன அழுத்­தத்­துக்கு ஆளா­கும் மாணவி­கள் சிலர், தவ­றான முடி­வு­களை எடுக்க நேரி­டு­கிறது," என்­கி­றார்­கள் உள­வி­யல் ஆலோ­ச­கர்­கள்.

அவ்­வாறு சிக்­க­லில் உள்ள மாண­வி­க­ளுக்கு உத­வும் வகையில் 'போலிஸ் அக்கா' திட்­டம் அறி­மு­க­மாகி உள்­ளது என்­கிறது காவல்­துறை.

இதன் மூலம் குற்­றச்செயல்­களை முன்­கூட்­டியே தடுக்க முடி­யும் என்­றும் மாண­வி­கள் பாதிக்­கப்­பட்ட பின்­னர் காவல் நிலை­யத்தை அணு­கா­மல், முன்­கூட்­டியே தங்­கள் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண முடி­யும் என்­பதே இந்த திட்­டத்­தின் முக்­கிய அம்­சம் என்­றும் காவல்­துறை கூறி­யுள்­ளது.

"எனவே மாண­வி­கள் இந்­தத் திட்­டத்தை பயன்­ப­டுத்தி பெண் காவ­லர்­களை தங்­கள் சகோதரி­யாக நினைத்து புகார்­களைத் தெரி­வித்து தீர்வு காண­லாம் என்று கோவை மாந­கர காவல்துறை ஆணை­யர் பால­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

'போலிஸ் அக்கா' திட்­டத்தை நேற்று முன்­தி­னம் தொடங்கி வைத்துப் பேசிய அவர், இத்­திட்­டத்­துக்­காக 37 காவல்­து­றை­யி­னர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் 15 நாள்­க­ளுக்கு ஒரு­முறை கல்லூரி மாண­வி­களைச் சந்­தித்துப் பேசி, அவர்­க­ளின் குறை­களைக் கேட்டறிந்து தீர்த்து வைப்­ப­து­தான் இவர்­க­ளு­டைய முக்­கி­யப் பணி என்றும் கூறினார்.

"இத்­திட்­டத்­துக்­கா­கப் பணி­யாற்­றும் பெண் காவ­லர்­க­ளுக்கு கல்­லூ­ரி­களில் தனி அறை ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. மாண­வி­கள் தங்­க­ளு­டைய பிரச்­சினை­கள் குறித்து வெளிப்­ப­டை­யா­கப் பேசுவதில் உள்ள தடை­கள், கார­ணங்­களை அகற்றி, அவர்­க­ளைப் பேச வைத்து, காவ­லர்­கள் தீர்வு காண்­பார்­கள்," என்று காவல்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன. மேலும், உடன் படிக்­கும் மாண­வர்­க­ளால் தொல்லை, வெளி ஆட்­க­ளி­டம் இருந்து வரும் மிரட்­டல்­கள், சமூக ஊட­கங்­கள் மூலம் எழும் சிக்கல்­கள் ஆகிய அனைத்­துக்­கும் தீர்வு காணப்­படும் என்­றும் பெண் காவ­லர்­க­ளின் கைபேசி எண்­கள் மாண­வி­க­ளுக்கு அளிக்­கப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.