குமரி: கன்னியாகுமரியில் பனிக்குளியல் மேற்கொள்ளும் போட்டி நடைபெற்றது. இதில் நாகர்கோவிலைச் சேர்ந்த முதுகலைப் பட்டதாரியான 37 வயதான கண்ணன், சுமார் நாற்பது நிமிடங்கள் வரை பனிக்குவியலில் அமர்ந்து சாதனை படைத்தார்.
முன்னதாக ஒரு குளியல் தொட்டியில் நிரப்பப்பட்டிருந்த ஐஸ் கட்டிகளில் எவ்வாறு நீண்ட நேரம் அமர்ந்து தாக்குப்பிடிக்க இயலும் என்பது பற்றி லண்டனைச் சேர்ந்த கரோலிஸ் சில குறிப்புகளை வழங்கினார்.
உடற்பயிற்சி நிலையம் நடத்தி வரும் கண்ணன் பல்வேறு சாகசப் போட்டிகளில் பங்கேற்று சாதித்து இரும்பு மனிதன் என்ற பட்டம் பெற்றுள்ளார்.
உடல் வலு போட்டியில் எட்டு முறை மாநில அளவில் இரண்டாம் இடத்தையும், தேசிய அளவில் மூன்று முறை இரும்பு மனிதர் பட்டமும் பெற்ற இவர், 9.5 டன் எடையுள்ள லாரியை 90 மீட்டர் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார். மேலும், 270 கிலோ எடை கொண்ட 2 இரு சக்கர வாகனங்களை தோள் மீது வைத்து 42 மீட்டர் தூக்கிச் சென்றதும் இவரது சாதனையாகும்.

