அதிக வெப்பத்தால் இந்தியாவுக்கு ரூ.13 லட்சம் கோடி இழப்பு

2 mins read
e80b7551-d313-4fa4-889f-84e3e1d542d4
-

புது­டெல்லி: கடந்த ஆண்டு நில­விய அதீத வெப்­ப பாதிப்பின் கார­ண­மாக வேளாண்மை, உற்­பத்தி, சேவை உள்­ளிட்ட துறை­களில் இந்­தி­யா­வுக்கு ஏறத்­தாழ ரூ.13 லட்­சம் கோடி அளவுக்கு வரு­வாய் இழப்பு ஏற்­பட்­ட ­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நிறு­வ­னங்­க­ளுக்­கான அனைத்­து­லகக் கூட்­ட­மைப்பு சாா்பில் பரு­வ­நிலை வெளிப்­ப­டைத் தன்மை குறித்த அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அதில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்­தி­யா­வில் நில­விய மித­மிஞ்­சிய வெயில் கார­ண­மாக உற்­பத்தி, கட்­டு­மா­னம் போன்ற பல்­வேறு துறை­களிலும் பணி­யா­ளா்­க­ளின் வேலைத்­தி­றன் பாதிக்­கப்­பட்டு 159 பில்­லி­யன் டாலர் (ரூ.13 லட்­சத்து 3 ஆயி­ரம் கோடி) வரு­வாய் இழப்பு ஏற்­பட்­ட­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இது, மொத்த உள்­நாட்டு உற்­பத்தி ­யில் 5.4 விழுக்­காடு. அதி­க­மான வெயி­லால் 16,700 ஊழியர்­க­ள் பணி நேர இழப்பும் ஏற்­பட்­டுள்­ளது.

உல­க­ளா­விய வெப்­ப­நிலை 1.5 டிகிரி செல்­சி­யஸ் அதி­க­ரித்­தால் இந்­தி­யா­வில் தொழி­லா­ளர் உற்­பத்­தித்திறன் 5 விழுக்­காடு வீழ்ச்­சி­யை­யும் வெப்பநிலை 2.5 டிகிரி செல்­சி­யசாக அதி­க­ரித்­தால் தொழி­லா­ளர் உற்­பத்தித்திறன் இரு மடங்­கு வீழ்ச்சியையும் வெப்பநிலை 3 டிகிரி செல்­சி­யசாக அதி­க­ரித்­தால் வீழ்ச்சி 2.7 மடங்­காகவும் இருக்­கும் என­வும் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்பட்­டுள்­ளது.

கடந்த 2016 முதல் 2021 வரை நாட்­டில் ஏற்­பட்ட வெள்­ளம், புயல், நிலச்­ச­ரிவு உள்­ளிட்ட இயற்­கைப் பேரி­டா்­க­ளால் 3.6 கோடி ஏக்­கர் பரப்­ப­ள­வில் நடப்­பட்­டி­ருந்த பயிா்கள் பாதிக்­கப்­பட்­ட­தாகவும் அத­னால் விவ­சா­யி­க­ளுக்கு சுமாா் ரூ.30,000 கோடி இழப்பு ஏற்­பட்­டதாகவும் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த 30 ஆண்­டு­களில் இந்­தி­யா­வின் மழைப்­பொ­ழிவு முறை பெரு­ம­ள­வில் மாற்­றம் கண்­டுள்­ளது. அதன்கார­ண­மாக வேளாண்மை, மீன்­வ­ளத் துறை­கள் பெரும் பாதிப்­பைச் சந்­தித்­துள்­ள­தாக அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதீத பரு­வ­நிலை மாற்­றங்­களைத் தவிா்ப்­ப­தற்­காக, எரி­சக்­தித் துறை­யில் பெரும் மாற்­றங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென நிபு­ணா்­கள் தெரி­வித்­துள்­ளனா்.

பரு­வ­நிலை மாற்ற விளை­வு­களை எதிா்கொள்­வ­தில் வளா்ந்து வரும் நாடு­க­ளுக்கு வளா்ச்­சி­யடைந்த நாடு­கள் உத­வ­வேண்­டும் என்­றும் அவா்கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளனா்.