தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்திய அரசு: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கும் தேதி தெரியாது

2 mins read
a4014de2-bc6c-4dbf-a8f9-a550f4c077a5
-

மதுரை: "மதுரை எய்ம்ஸ் மருத்­து­வ­மனை­யின் கட்­டு­மா­னப் பணி­கள் எப்­போது தொடங்­கும் என்ற விவரம் தெரியாது," என மத்திய சுகாதார அமைச்சு அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது.

மது­ரை­யில் எய்ம்ஸ் மருத்­து­வ­மனை அமைக்­கப்­படும் என 2015ல் மத்­திய அரசு அறி­வித்­தது.

அதன்பிறகு ஏழு ஆண்­டு­கள் ஆகி­யும் அதற்­கான பணி­கள் தொடங்­கா­மல் இருப்­பது குறித்து தமி­ழக அர­சும் எதிர்க்­கட்­சி­களும் கேள்விகள் எழுப்­பின.

இருப்­பி­னும், அது­கு­றித்த எந்த ஓர் உறு­தி­யான தக­வ­லை­யும் மத்­திய அரசு கூறாமல் இருந்து வந்தது.

இந்­நி­லை­யில், இம்மருத்­துவ மனை­யின் கட்­டு­மா­னப் பணிகள் குறித்து தென்­கா­சி­ மாவட்டத்தின் பாண்­டி­ய­ராஜா என்ற சமூக ஆர்­வ­லர் தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின்கீழ் கேள்வி கேட்டிருந்தார்.

அதற்­குப் பதி­ல­ளித்­துள்ள மத்­திய சுகா­தா­ரம், குடும்ப நலத்­துறை அமைச்­சு அதி­கா­ரி­கள், மதுரை எய்ம்ஸ் மருத்­து­வ­மனை கட்­டு­மானப் பணி­களை மேற்­பார்­வை­யி­டும் நிறு­வ­னத்தை இறுதி செய்­யும் பணி­கள் நடந்துவரு­வ­தா­கக் கூறி­யுள்­ள­னர்.

2026ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதத்­தில் கட்­டு­மா­னப் பணி­கள் முடி­யும் என்­றும் திட்­டத்­தின் மொத்த மதிப்­பீ­டான 1977.8 கோடி ரூபா­யில் 82 விழுக்­காட்­டுத் தொகையை ஜப்­பான் நாட்டைச் சேர்ந்த ஜைய்கா நிறு­வ­னம் வழங்­கும் என்­றும் மீதித் தொகையை மத்­திய அரசு வழங்­கும் என­றும் தெரி­வித்துள்ளனர்.

எனினும், கட்­டு­மா­னப் பணி­கள் எப்­போது தொடங்­கும் என்ற தேதி சம்பந்தமான தகவல்கள் தெரிய வில்லை என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மதுரை மருத்­து­வ­ம­னை­யோடு அறி­விக்­கப்­பட்ட இமாச்­ச­லப்­பி­ர­தேச எஸ்ம்ஸ் மருத்­து­வ­மனை கட்­டு­மா­னப் பணி­கள் நிறை­வடைந்து திறந்துவைக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், மத்­திய அர­சின் பதில் ஏமாற்­றம் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.