முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றச்சாட்டு தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்பனை

முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றச்சாட்டு தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்பனை

2 mins read
4396d3a7-15eb-44c3-95d2-3d7d11dad70a
பன்­வாரி­லால் புரோ­கித். படம்: ஊடகம் -

சண்­டி­கார்: தமிழ்­நாட்­டில் துணை வேந்­தர்கள் நிய­ம­னத்­தில் ஊழல் நில­வி­ய­தாக பஞ்­சாப் ஆளு­நர் பன்­வாரி­லால் புரோ­கித் பகி­ரங்­க­மாக குற்றச்சாட்டை முன்வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் மட்டுமன்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எடப்­பாடி பழ­னி­சாமி தலைமை யிலான அதி­முக ஆட்­சி­யில் பல்­கலைக்­க­ழக துணைவேந்­தர் பதவி ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை விற்­பனை செய்­யப்­பட்­ட­தாக தமி­ழ­கத்­தின் முன்­னாள் ஆளு­ந­ரும் இப்­ போ­தைய பஞ்­சாப் ஆளு­ந­ரு­மான பன்­வா­ரி­லால் கூறி­யுள்­ளார்.

பஞ்­சாப் மாநி­லம், சண்­டி­கா­ரில் நடை­பெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்­றில் அவர் கலந்துகொண்டு பேசி­ய­போது, "தமி­ழ­கத்­தில் 2017 முதல் 2021 வரை நான்கு ஆண்டுகள் தமிழக ஆளுநராக நான் பணியாற்றி உள்ளேன். அந்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்­தது. அங்கு பல்­கலைக்­க­ழகத் துணைவேந்­தர் பதவி ரூ.40 முதல் ரூ.50 கோடிக்கு விற்­கப்­பட்டு வந்­த­து," எனச் சொன்னார்.

"ஒரு ஆளுநராக நான் எனது பணிக்காலத்தில் தமி­ழ­கப் பல்­கலைக்­க­ழ­கங்­க­ளுக்கு 27 துணை­வேந்­தர்­களை சட்­டப்­படி நிய­மித்துள்ளேன்," என்றும் கூறிய அவர், அதனால் இதுபோன்ற பணி களை எப்படிச் செய்யவேண்டும் என்பதை பஞ்சாப் அரசு தன்னிடம் இருந்து கற்றுக்கொள்வது மிகவும் நல்லது என்றும் தெரிவித்தார்.

"பஞ்சாப் மாநிலத்தில் யார் திறமையானவர், யார் திறமையற்றவர் என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆனால், கல்வியின் தரம் உயர வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன்," என்றார்.

தமி­ழக ஆளு­ந­ராக புரோ­கித் இருந்­த­போது, அதி­முக ஆட்­சித் தலை­மை­யில் ஏற்­பட்ட பல்­வேறு குள­று­ப­டி­க­ளைப் பயன்­ப­டுத்தி, தன்­னிச்­சை­யாக பல துணைவேந்­தர்­களை நிய­மித்­தார் என்ற குற்றச் ­சாட்­டும் எழுந்­தது.

பல்­வேறு சர்ச்­சை­க­ளி­லும் முறை­கே­டு­க­ளி­லும் ஈடு­பட்ட அண்ணா பல்­க­லைக்­க­ழக துணை வேந்­தர் சூரப்பா, பன்­வா­ரி­லால் புரோ­கித்­தால்­தான் நிய­மிக்­கப்­பட்­டார்.

இந்­நி­லை­யில் அதி­முக ஆட்­சி­யில் துணைவேந்­தர் பதவிகள் விற்­கப்­பட்­ட­தா­கக் கூறி­யி­ருப்­பது சர்ச்­சையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.