சென்னையில் மக்கள் வெள்ளம்

சென்னையில் மக்கள் வெள்ளம்

2 mins read
8dd15147-e2bc-4bcf-821f-749ecc04a187
கொவிட்-19 தொற்றுக்குப் பிறகு இவ்வாண்டு தமிழகம் முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

சென்னை: தீபா­வ­ளிக்கு இன்னும் ஒரு நாளே இருந்த நிலை­யில் நேற்று சென்­னை­யின் பெரும்­ பாலான கடை­களில் கூட்­டம் அலை­மோ­தி­யது. சென்­னை­யைச் சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளி­லி­ருந்­தும் மக்­கள் குவிந்ததால் கடைசி நேர விற்­பனை விறுவிறுப்பாக நடை­பெற்­றது.

காலை­யி­லி­ருந்தே சென்­னை­யில் உள்ள கடை வீதி­களில் குழந்­தை­கள், இளை­ஞர்­கள், பெண்­கள் கூட்­டம் காணப்­பட்­டது.

பெரு­ந­க­ரின் வர்த்­த­கப் பகு­தி­யான தி.நகர், பழைய வண்­ணா­ரப் ­பேட்டை, புர­சை­வாக்­கம், அண்ணா நகர், வட­ப­ழனி, பெரம்­பூர், மைலாப்­பூர், அடை­யாறு, திரு­வான்­மி­யூர், நுங்­கம்­பாக்­கம், பல்­லா­வ­ரம், குரோம்­பேட்டை, வேளச்­சேரி, போரூர் உள்ளிட்ட பல பகு­தி­களில் ஜவுளிக் கடை­கள், நகைக் கடை­கள் மற்­றும் வணிக வளா­கங்­களில் மக்­கள் கூட்­டம் நிரம்பி இருந்­தது.

பிர­பல ஜவு­ளிக்கடை­கள், நகைக் கடை­கள் திறப்­ப­தற்கு முன்பே மக்­கள் கூடி காத்­தி­ருந்­த­னர். மக்­கள் கூட்­டம் நிரம்பி வழிந்­த­தால் ஊர்ந்து சென்று பொருட்­களை வாங்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

தீபாவளியையொட்டி திடீர் கடை­களும் உத­ய­மா­கி, வீதி­யில் உள்ள கடைகளிலேயே பெரும்­பா­லான தீபா­வளி பொருட்­களை மக்­கள் வாங்­கி­னர்.

இனிப்புக் கடை­க­ளி­லும் மக்­கள் கூட்­ட­மாக மொய்த்­த­னர். உற­வினர்­கள், நண்­பர்­க­ளுக்கு இனிப்பு கொடுப்­ப­தற்­காக அன்­ப­ளிப்பு பெட்டி­களைப் பலர் வாங்கி சென்­ற­னர்.

தீபா­வ­ளி­யின் உச்­சக்­கட்­ட­மாக பட்­டாசு இருப்­ப­தால் பசுமை பட்­டாசு விற்­ப­னை­யும் அமோக நடந்தது. சென்­னை­யில் பல பகுதி களில் பெரிய அள­வி­லான கடை­கள் அமைத்து பட்­டாசு விற்­கப்­படுகின்­றன. குழந்­தை­களை மகிழ்­விப்பதற்­காக பெற்­றோர் பல­த­ரப்­பட்­ட ­பட்­டா­சு­களை வாங்­கிச் சென்­ற­னர். இவ்­வாண்டு பட்­டாசு விலை அதி­க­ரித்­தா­லும் மக்­கள் கவ­லைப்­படுவதாக இல்லை. பட்­டாசு விற்­பனை சூடுபிடித்துள்ளது.

தீவுத்­தி­ட­லில் 35 பட்­டாசுக் கடை­கள் ஒரே இடத்­தில் செயல்­ப­டு­ வதால் அந்த இடமே திரு­விழா போல காட்சி அளித்­தது.

பேருந்து, ரயில் தவிர சொந்த வாக­னங்­க­ளி­லும் மக்­கள் கடை­ க­ளுக்­குச்சென்று தீபா­வளி பொருட்­களை வாங்­கு­வ­தால் பல இடங்­களில் போக்குவ­ரத்து நெரி­ச­லும் ஏற்­பட்­டது.

சுமார் 18.000 காவ­லர்­கள் பாது­காப்­புக்கு நிறுத்­தப்­பட்­டுள்­ள­னர். இதற்­கி­டையே பாஜக தலை­வர் அண்­ணா­மலை," "நிறைய பட்­டாசு களை வெடியுங்கள். ஒரு­நாள் ஏற்­படும் காற்று மாசு பற்றி கவ­லைப் ­ப­டா­தீர்கள், பட்­டாசு உற்­பத்தி செய்­யும் சிவ­காசி மக்­கள் வாழ­வேண்­டும்," என்­றார்.