கால்வாயில் வீசப்பட்ட குழந்தை மீட்பு

கால்வாயில் வீசப்பட்ட குழந்தை மீட்பு

1 mins read
5c8716f9-0ac5-4644-be6d-4b4af30d2f53
குழந்தையுடன் காவலர்கள். படம்: இந்திய ஊடகம் -

மானா­ம­துரை: சிவ­கங்கை மாவட்டம் மானா­ம­துரை பகு­தி­யில் மழை­நீர் கால்­வா­யில் வீசப்­பட்ட பச்­சி­ளம் பெண் குழந்­தையைக் காவ­லர்­கள் மீட்­டுள்­ள­னர்.

திருப்­பு­வ­னம் காவல்­நி­லைய துணை ஆய்­வா­ளர் சந்­தி­ரன், மானா­ ம­துரை சிறப்பு துணை ஆய்­வா­ளர் ராமச்­சந்­தி­ரன், பெண் காவ­லர் ராதிகா ஆகிேயார் நேற்று காலை மானா­ம­துரை துணைச் சாலை அரு­கில் உள்ள ரயில்வே மேம்­பா­லம் பகு­தி­யில் சுற்­றுக்காவ­லில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.

அப்­போது கல்­லறை தோட்­டம் பகு­தியை ஒட்­டி­யுள்ள மழை­நீர் கால்­வாய் கான்கிரீட் சிலாப்புப் பகு­தி­யில் இருந்து ஒரு குழந்­தை­யின் அழு­கு­ரல் கேட்­டது. காவ­லர்­கள் தேடி­ய­போது மழை­நீர் கால்­வா­யில் தண்ணீர் இல்­லாத பகு­தி­யில் பிறந்து இரண்டு நாட்­களே ஆன குழந்தை ஒன்று கைவி­டப்­பட்­டி­ருந்­தது. குழந்­தையை மீட்டு மானா­ ம­துரை அரசு மருத்­து­வ­ம­னை­யில் காவலர்கள் சேர்த்­த­னர்.

மழை­நீர் கால்­வா­யில் பச்­சி­ளம் குழந்­தையை வீசி­விட்டு சென்­றது யார்? என்­பது குறித்து காவ­லர்­கள் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.