வீட்டை விற்று தமிழ்நாடு வந்த தாய்

வீட்டை விற்று தமிழ்நாடு வந்த தாய்

1 mins read
fa565999-d7f8-4184-9dd9-8978430fede7
தமிழ்நாட்டு மண்ணில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருவாட்டி சாந்தி, மகன் அஜந்தன், 22, மகள் சுரபி, 12, (நடு). படம்: தமிழக ஊடகம் -

ராமேஸ்­வ­ரம்: இலங்­கை­யில் பொருளி­யல் நில­வ­ரம் சரி­யில்­லா­மல் இருப்­ப­தால் மக்­கள் பாடா­த­பாடு படு­கி­றார்­கள்.

அந்த நாட்­டுத் தமிழர்­கள் பல­ரும் சட்­ட­வி­ரோ­த­மாக தமி­ழ­கத்­திற்கு வரு­வது அதி­க­ரித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், யாழ்ப்­பா­ணத்தைச் சேர்ந்த சாந்தி என்ற கண­வரை இழந்த 42 வயது மாது தன் இரண்டு பிள்­ளை­க­ளோடு தமிழ் நாட்­டுக்கு வர முடிவு செய்­தார்.

சட்ட விரோ­த­மாக தமிழ்­நாட்டுக்கு வர தேவைப்­பட்ட 60,000 இலங்கை ரூபா­யைப் பெற வழி இல்­லா­த­தால் அவர் யாழ்ப்­பாணத்­தில் உள்ள தன் வீட்டை விற்றுப் பணத்தைத் திரட்­டி­னார்.

மன்­னா­ரில் இருந்து வெள்­ளிக்­கி­ழமை இர­வு தன் பிள்­ளை­களுடன் பட­கில் புறப்­பட்ட அந்த மாது, அடுத்த நாள் அதி­கா­லை­யில் தனுஷ்­கோ­டி­யில் இறக்கிவிடப்பட்­டார். வழி எது­வும் தெரி­யா­மல் அழுது­கொண்டு இரு­ந்த அந்த மாதை­யும் பிள்­ளை­க­ளை­யும் மீட்ட தமிழக அதிகாரிகள் அவர்களை முகா­மிற்­குக் கொண்டு சென்று உண்ண உணவு, இருக்க இடம் கொடுத்­து உதவியதாக தகவல்கள் தெரிவித்தன.