61 ஆண்டுகளாக தீபாவளியைக் கொண்டாடாத 12 கிராம மக்கள்

61 ஆண்டுகளாக தீபாவளியைக் கொண்டாடாத 12 கிராம மக்கள்

2 mins read
216d1502-38f0-4bf3-aa1d-2ce44186db65
-

சிவ­கங்கை: சிவ­கங்கை மாவட்­டத்­தில் வசிக்­கும் 12 கிரா­மங்­க­ளைச் சேர்ந்த மக்­கள், முன்­னோர்­க­ளின் கட்­டுப்­பாடு கார­ண­மாக 61 ஆண்டு களாக தீபா­வ­ளித் திரு­நாள் கொண்­டா­டா­மல் இருந்து வரு­கின்­ற­னர்.

ஐப்­பசி மாதத்­தில் கடன் வாங்கி வேளாண் பணி­க­ளைத் தொடங்­கும் சூழ­லில், தீபா­வ­ளித் திரு­நா­ளும் வரு­வ­தால் அதற்­காக கடன் வாங்கி மக்­கள் சிர­மப்­பட்­டுள்­ள­னர்.

இத­னால், கடந்த 1958ஆம் ஆண்டு ஊர்த் தலை­வர்­கள் தலை­மை­யில், சிங்­கம்­பு­ணரி ஒன்­றி­யத்­துக்கு உட்­பட்ட மாம்­பட்டி, ஒப்­பி­லான் பட்டி, தும்­பைப்­பட்டி, சத்­தி­ரப்­பட்டி உள்­ளிட்ட 12 கிரா­மங்­க­ளைச் சேர்ந்த மக்­கள் ஒன்று­கூடி கடன் வாங்கி தீபா வளியைக் கொண்டா­டக் கூடாது என முடி­வெ­டுத்­த­னர்.

இது­தொ­டர்­பாக அங்­குள்ள மக்­கள் குல­தெய்­வக் கோயி­லில் சத்­தி­யம் செய்­த­தா­கக் கூறப்­படு­கிறது. அதன்­படி 12 கிரா­மங்­களில் தீபா­வ­ளிக் கொண்­டாட்­டம் என்பது அறவே கிடையாது.

இது­கு­றித்து மாம்­பட்­டி­யைச் சேர்ந்த சுதா கூறு­கை­யில், "எங்­க­ளுக்கு விவ­ரம் தெரிந்த காலம் முதல் கடந்த 61 ஆண்­டு­க­ளாக எங்­கள் கிரா­மத்­தி­னர் தீபா­வ­ளி­யைக் கொண்­டா­டு­வது இல்லை. பல­கா­ரம் சுடு­வ­தில்லை. புத்­தா­டை­கள் அணி­வ­தில்லை.

"விவ­சா­யக் காலத்­தில் புத்தாடை எடுப்­பது, பல­கா­ரங்­கள் செய்­வ­தற்கு நமக்கு வசதி போதாது. அத­னால் தீபா­வளி வேண்­டாம், பொங்­கலை மிக­வும் சிறப்­பா­கக் கொண்­டா­டிக் கொள்­வோம்," என எங்­க­ளது முன்­னோர்­கள் அறி­வு­றுத்தி உள்­ள­னர். அத­னைப் பின்­பற்றி வரு­கி­றோம்," என்­றார்.

தீபா­வ­ளிக் கொண்­டாட்­டங்­களை­விட வேளாண்­மைக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்து வரு­வ­தா­க­வும் கிரா­ம­மக்­கள் கூறி­னர்.

61 ஆண்­டு­க­ளுக்கு முன், தீபா­வ­ளி­யைக் கடன் வாங்கி கொண்டாடிய­தால் அறு­வடைக் கடனை செலுத்தமுடி­யா­மல் விவ­சா­யி­கள் அவ­திப்­பட்­ட­னர். வறு­மைக்­காக கொண்­டாட்­டங்­களை நிறுத்­திய கிராம மக்­கள், இன்று அதிலிருந்து மீண்­டு­வந்­தா­லும் கூட முன்­னோர்­க­ளின் கட்­டுப்­பா­டடை அவர்­கள் மதித்து வரு­கின்­ற­னர்.

இந்தக் கிராம மக்­கள், வேலைக்­காக வெளி­யூர் சென்­றா­லும்கூட முன்­னோர்­க­ளின் கட்­டுப்­பாட்டை மதித்து அங்­கும் தீபா­வ­ளி­யைக் கொண்­டா­டு­வ­தில்லை என தெரி­வித்­த­னர்.

இத­னி­டையே, சென்­னை­யில் தீபா­வ­ளித் திரு­நாளன்று, அதிக அள­வில் பட்­டா­சு­கள் வெடிக்­கப்­பட்­ட­தால் காற்று மாசு­பாடு அனு­ ம­திக்­கப்­பட்ட அள­வை­விட ஒன்­றரை மடங்கு அதி­க­ரித்து இருப்­ப­தாக மாசு கட்­டுப்­பாட்டு வாரியம் தெரி­வித்துள்ளது.