இரட்டைக் குழந்தை விவகாரம்: இன்று விளக்கம்

இரட்டைக் குழந்தை விவகாரம்: இன்று விளக்கம்

1 mins read
9c528f66-d374-4e79-b53b-f4086201f578
-

சென்னை: நயன்­தாரா-விக்­னேஷ் சிவன் தம்­ப­தி­யர் கடந்த ஜூன் மாதம் திரு­ம­ணம் செய்­து­கொண்ட நிலை­யில், நான்கே மாதங்­களில் தங்­க­ளுக்கு இரட்­டைக் குழந்தை பிறந்­துள்­ள­தாக அறி­வித்­த­னர். இவர்­கள் விதி­முறை களை மீறி குழந்தை பெற்­ற­தா­க­வும் சர்ச்சை எழுந்­தது.

இந்­நி­லை­யில், இவ்விவ­கா­ரம் குறித்து மருத்­து­வ­மனை நிர்­வா­கத்­தி­டம் நேற்று விசா­ரணை நடை­பெற்றதை அடுத்து, இன்று மாலை தெளி­வான விளக்­கம் அளிக்­கப்­படும் என மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்பி­ர­ ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

இது­வரை சுகா­தா­ரத்­துறை அதி­காரி­கள் மேற்­கொண்ட விசா­ர­ணை­யில், மருத்­து­வ­மனை நிர்­வா­கம் விதி­களை மீறியிருப்­பது அம்­ப­ல­மாகி உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்த விதிமீறல் உறுதியானால் மருத்­து­வ­மனை மீது சட்­ட­பூர்வ நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனத் தெரி­கிறது.

மருத்­து­வ­ம­னை­யின் விளக்­கத்தைப் பொறுத்து நயன்­தாரா-விக்­னேஷ் சிவ­னி­டம் விளக்­கம் பெறப்­பட்டு அறிக்கை வெளி­யா­கும் என கூறப்படுகிறது.