தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கோவை மாநகர்; கோவில்களிலும் பாதுகாப்பு அதிகரிப்பு கார் வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய ஐவர் கைது

2 mins read
0c8f626d-85ec-4fb9-8bcd-07001e0213a1
இடது: தீப்பற்றி வெடித்துச் சிதறிய கார். மேல்படம்: கைதானவர்கள்.வலது: உயிரிழந்த ஐமே‌ஷா முபின் படங்கள்: ஊடகம் -
multi-img1 of 3

கோவை: கோவை மாநகரில் காரில் எடுத்­துச்செல்­லப்­பட்ட சமையல் எரி­வாயு உருளை வெடித்­துச் சிதறி­ ய­தில், காரை ஓட்­டிச்சென்­ற­வர் உயி­ரி­ழந்­தார்.

அவர், ஜமேஷா முபின், 25, என அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளது.

இச்சம்பவம் தொடர்பில், முகம் மது அசா­ரு­தீன், 23, ஃபைரோஸ் இஸ்­மா­யில், 27, முகம்­மது தல்கா, 25, முக­ம்மது நவாஸ் இஸ்­மா­யில், 26, முக­ம்மது ரியாஸ், 27, ஆகிய ஐவரை நேற்று முன்தினம் இரவு காவலர்கள் கைது செய்தனர்.

காரில் இருந்து ஆணி, சிறுசிறு பால்ரஸ் குண்டுகள் சிதறியதை அடுத்து, ஜமேஷா முபின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

முபின் வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிப்பதற்குத் தேவையான வேதிப்பொருள்களை கிலோ கணக்கில் காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

கோவையில் உள்ள கோட்டை ஈஸ்­வ­ரன் கோயில் அருகே ஞாயி­றன்று அதி­காலை நடந்த இக் கார் ­வி­பத்­தின் எதி­ரொ­லி­யாக, கோவை மாந­க­ரம் பாதுகாப்பு வளையத்துக் குள் கொண்டுவரப்பட்டு உள்ளது.

10 மாவட்டக் காவலர்கள், 240 மத்­திய துணை ராணுவப்­ப­டை­யினர் என ஏறக்குறைய 3,000 பேர் அங்கு பாதுகாப்புக்காக ஈடுபட்டுள்ளனர்.

கார் வெடிப்பு சம்பவம் கோவில் களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மாநிலத்தில் உள்ள கோவில்களில் காவலர்கள் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனிடையே, முபின் உடல் உடல்கூராய்வுப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது மனைவிடம் நேற்று காலை ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், உடலை அடக்கம் செய்ய கோயம்புத்தூரில் உள்ள ஜமாத்துகள் முன்வரவில்லை.

கோவையில் அனைத்து ஜமாத்து களும் அமைதியை விரும்புவதாகவும் சமூக விரோதச் செயலுக்குத் திட்ட மிட்ட முபின் உடலை அடக்கம் செய்ய மனம் வரவில்லை எனவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்­நி­லை­யில், மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யி­ல் கோவை பூச்சந்தை ஜமாத்­தில் முபி­னின் உடல் அடக்­கம் செய்­யப்­பட்­ட­து.

முபினுக்கும் 2019ல் கொழும்பு தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பு கைதிக்கும் தொடர்பிருப் பதாகவும் சந்தேகிக்கப்பட்டுள்ளது.