வெறித்தனத் தாக்குதல் நடத்தி காவல் துறை அதிகாரியால் சுடப்பட்ட ஆடவருக்குச் சிறை

வெறித்தனத் தாக்குதல் நடத்தி காவல் துறை அதிகாரியால் சுடப்பட்ட ஆடவருக்குச் சிறை

1 mins read
a6b2a43f-782a-49e7-b90c-b519dd3953e5
-

போதைப்­பொ­ருள் புழக்­கம், வன்­மு­றை­யில் ஈடு­ப­டு­தல் ஆகி­யவை தொடர்­பான குற்­றங்­க­ளுக்­குச் சிறைக்­குச் சென்று வந்த சூ சியாவ் வீ, 50, கிள­மெண்­டி­யில் வெறித்­த­னத்­து­டன் தாக்­கு­தல் நடத்­தி­யதை அடுத்து காவல் அதி­காரி ஒரு­வ­ரால் சுடப்­பட்டார் சூ. சூவுக்கு நேற்று ஈராண்டு, 9 மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கடந்த பிப்­ர­வரி 17ஆம் தேதி­யன்று கேலாங் பகு­திக்கு சூ சென்று மருத்­து­வக் குறிப்பு இல்­லா­மல் 'டய­ஸெ­பாம்', இரு­மல் மருந்து ஆகி­ய­வற்றை உட்­கொண்­ட­தா­க­வும் அதன் பின்­னர் கிள­மெண்­டி­யில் உள்ள தன் அம்­மா­வின் வீட்­டுக்­குச் சென்று தன்­னை­யும் தன் அம்­மா­வை­யும் யாரோ கொல்ல வரு­கி­றார்­கள் என்று காவ­லர்­க­ளு­டன் தொடர்­பு­கொண்டு கூறி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

வழி­போக்­கர்­களை வெட்­டித் தாக்­கு­மாறு தனக்கு ஒரு குரல் கூறி­ய­தாக நம்பி, கத்­தி­யு­டன் வீட்டை விட்டு வெளி­யேறி சூ, ஒரு­வ­ரைத் தாக்­கி­ய­தாக அறி­யப்­ப­டு­கிறது.

பின்­னர், டாக்­சி­யில் ஏறிய சூ, கிள­மெண்டி காவல் நிலை­யத்­திற்­குச் செல்­லு­மாறு ஓட்­டு­ந­ரி­டம் கூறி­விட்டு அவ்­வி­டத்தை நெருங்­கு­கை­யில் டாக்சி நக­ரும்­போதே அதி­லி­ருந்து இறங்க முயன்­ற­தா­கக் கூறப்­பட்­டது.

டாக்சி ஓட்­டு­நர் வாக­னத்தை நிறுத்தி அதி­லி­ருந்து இறங்­கி­ய­போது அவ­ரை­யும் சூ தாக்­கச் சென்­றார். ஆனால் டாக்சி ஓட்­டு­நர் தப்­பி­விட்­டார்.

சூ பின்­னர் காவல் நிலை­யத்­தின் வாசலை நோக்­கிச் சென்று புரி­யாத வண்­ணம் பேசி­னார். திடீ­ரென 20 வயது அதி­காரி ஒரு­வ­ரைத் தாக்­கச் சென்­ற­போது இடது கையில் அந்த அதி­காரி சூவைச் சுட்­டார். கீழே விழுந்த சூ, கைது செய்­யப்­பட்டு மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.