கோவையில் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்

கோவையில் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம்

2 mins read
33fa29f9-2e63-45d8-83c4-be0b839c695a
கோவையில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த இரு தினங் களாக தீவிர வாகனச்சோதனை நடைபெறுகிறது. படம்: ஊடகம் -

தீபாவளிக் கொண்டாட்டத்தை சீர்குலைக்க சதி; கோவில்களைக் குறி வைத்தது அம்பலம்

கோவை: அண்­மை­யில் காரில் வைக்­கப்­பட்­டி­ருந்த எரி­வாயு உருளை வெடித்­துச் சித­றிய சம்பவம் தொடர்­பாக விரி­வான விசா­ரணை மேற்­கொள்ள தேசிய புல­னாய்வு முகமை அதி­கா­ரி­கள் கோவை­யில் முகா­மிட்­டுள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பாக ஐந்து பேர் கைதாகியுள்ள நிலையில், கோவை­யின் முக்­கிய பகு­தி­களில் தாக்­கு­தல் நடத்த பயங்­க­ர­வா­தி­கள் திட்­ட­மிட்­டி­ருந்­தது தெரிய வந்­துள்­ளது.

கடந்த 23ஆம் தேதி கோவை மாவட்­டம் உக்­க­டம் பகு­தி­யில் உள்ள ஈஸ்­வ­ரன் கோவில் முன்பு சென்று கொண்­டி­ருந்த கார் ஒன்று, அதி­காலை சுமார் நான்கு மணி­அளவில் திடீ­ரென வெடித்­துச் சிதறி­யது. இதில் அந்­தக் காரில் இருந்த ஜமேஷா முபின் (29 வயது)என்­ப­வர் பலி­யா­ன­தா­க­வும் இச்­சம்பவம் குறித்து விசா­ரிக்க ஆறு தனிப்­ப­டை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்­தது.

முபின் வீட்­டில் சோத­னை­யிட்­ட­போது பல்­வேறு வித­மான வெடி­பொ­ருள்­கள் கைப்­பற்­றப்­பட்­டன. இதை­ய­டுத்து பல்­வேறு திடுக்­கி­டும் தக­வல்­கள் வெளி­வந்த வண்­ணம் உள்­ளன.

கோவை­யில் உள்ள கோவில்­களில் தாக்­கு­தல் நடத்­து­வதே பயங்­க­ர­வா­தி­க­ளின் திட்­டம் என்­றும் அதை நிறை­வேற்ற திட்­ட­மிட்­டி­ருந்த நிலை­யில்­தான் ஐந்து பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. இதற்­காக ஐந்து இடங்­களை பயங்­க­ர­வா­தி­கள் தேர்வு செய்­தி­ருந்­த­தா­கத் தெரிகிறது.

இதை­ய­டுத்து இந்த வழக்­கில் தேசிய புல­னாய்வு முக­மை­யும் விசா­ர­ணை­யைத் தொடங்கி உள்ளது. கார் வெடிப்­பில் பலியான ஜமேஷா முபின் வீட்­டுக்கு அருகே உள்ள கண்­கா­ணிப்­புக் கேம­ராக்களில் பதி­வான காட்­சி­க­ளைப் பார்­வை­யிட்­ட­போது, கைதான ஐந்து பேரும் பெரிய மூட்டை ஒன்றை தூக்­கிச் செல்­லும் காட்சி பதி­வாகி உள்­ளது. நிறைய வெடி­பொ­ருள்­களை அவர்­கள் இடம் மாற்றி இருக்­க­லாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே, கார் வெடிப்­பில் உயி­ரி­ழந்த முபின் வீட்­டில் இருந்து புல­னாய்வு அதி­கா­ரி­கள் டைரி ஒன்றைக் கைப்­பற்றி உள்­ள­தா­க­வும் அதில் பல்­வேறு முக்­கி­ய­மான தகவல்­கள் உள்­ள­தா­க­வும் மற்றோர் ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

அவற்­றின் அடிப்­ப­டை­யில் கணக்­கி­டும்­போது, தீபா­வளி பண்டிகை­யின்­போது கோவை­யில் பயங்­கர தாக்­கு­தல் நடத்த பயங்­க­ர­வா­தி­கள் திட்­ட­மிட்டு, அது தோல்வி­யில் முடிந்­துள்­ள­தாக கருத வேண்டி­ உள்­ளது என காவல்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்நிலையில் கோவை, கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், நேற்று தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோ சனையில் ஈடுபட்டார். அதன் பின்னர், இது தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.