இந்தித் திணிப்புக்கு வைரமுத்து கடும் எதிர்ப்பு

இந்தித் திணிப்புக்கு வைரமுத்து கடும் எதிர்ப்பு

1 mins read
c9ea832f-6560-402e-bd3b-deea22aad117
-

சென்னை: கடந்த 1965ஆம் ஆண்டு தமி­ழ­கத்­தில் ஏற்­பட்ட இந்தி எதிர்ப்பு எழுச்­சியைவிட, நடப்­பாண்­டில் தமி­ழர்­கள் கூடு­தல் எழுச்சி பெற வேண்­டும் என கவி­ஞர் வைர­முத்து வலியுறுத்தியுள்ளார்.

இந்தி மொழி தெரி­யா­த­வர்­கள் மத்­திய அர­சுப் பணி­களில் சேர முடி­யாது என்ற நிலையை உரு­வாக்க முயற்சி நடப்­ப­தாக அவர் குற்­றம்­சாட்டி உள்­ளார்.

மத்­திய அரசு இந்தி மொழி பேசாத மக்­கள் அதி­கம் உள்ள மாநி­லங்­களில் அம்­மொ­ழியை மறை­மு­க­மாக திணிக்க முயற்சி செய்­வ­தா­கப் பர­வ­லா­கக் குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.

மத்­திய அர­சுக்கு பல்­வேறு தரப்­பி­ன­ரும் கடும் கண்­ட­னம் தெரி­வித்து வரும் நிலை­யில், இந்­தித் திணிப்­புக்கு எதி­ராக தமிழ்க் கூட்­ட­மைப்பு சார்­பில் கவி­ஞர் வைர­முத்து தலை­மை­யில் சென்­னை­யில் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது. அப்­போது பேசிய அவர், நாடு முழு­வ­தும் பயிற்சி மொழி­யாக இந்­தியைக் கொண்டு வந்து ஆங்­கி­லத்தை அகற்ற முயற்சி நடப்­ப­தா­கச் சாடி­னார்.

"வாழ்­வோ­டும் வச­தி­யோ­டும் இருக்க தமிழ், ஆங்­கி­லம் தெரிந்­தால் போதும். இந்தி மொழி மீது எங்­க­ளுக்கு வெறுப்பு இல்லை. இந்தி மொழியை மதிக்­கி­றோம். ஆனால் அதை திணிக்­கா­தீர்­கள்.

"தமிழ் மொழி ஃபீனிக்ஸ் பறவை போன்­றது. அதை அழித்­தா­லும் மீண்­டும் உயிர்த்­தெ­ழுந்து வரும். முந்­திரி இருக்­கும் மூட்­டை­யில், வண்­டு­களை நுழையவிட்டால் முந்­தி­ரியை அழித்­து­வி­டும்," என்­றார் வைர­முத்து.

இந்தி நேற்று பிறந்த மொழி என்று குறிப்­பிட்ட அவர், ஐந்­தா­யி­ரம் ஆண்­டு­க­ளுக்கு முன்பு பிறந்த தமிழ் மொழியை எப்­ப­டிப் புறந்­தள்ள முடி­யும் எனக் கேள்வி எழுப்­பி­னார்.