நயன்-விக்கி மீது தவறில்லை

நயன்-விக்கி மீது தவறில்லை

1 mins read
3deb163c-3e14-42c5-a259-4c94218db47d
வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக் கொண்ட நயன்-விக்கி தம்பதியர். படம்: தமிழக ஊடகம் -

சென்னை: நயன்­தாரா-விக்­னேஷ் சிவன் தம்­பதி இரட்டை குழந்தை விவ­கா­ரத்­தில் விதி­கள் மீறப்­ப­ட­வில்லை என சுகா­தா­ரத்­துறை அறிக்கை தெரி­வித்­துள்­ளது.

நயன்­தாரா-விக்­னேஷ் சிவன் தம்­ப­திக்கு 2016ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி பதிவுத் திரு­ம­ணம் நடந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அவர்­க­ளின் திரு­ம­ணம் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி நடந்­தது.

அவர்­கள் வாட­கைத்­தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்­றுக்கொண்­ட­தாக, திரு­ம­ண­மாகி நான்கு மாதம் சென்ற நிலை­யில், கடந்த 9ஆம் தேதி தெரி­வித்­த­னர்.

இந்த விவ­கா­ரத்­தில் வாட­கைத்­தாய் ஒழுங்­கு­முறை சட்ட விதி­கள் மீறப்­பட்­ட­தாக பல்வேறு புகார்­கள் தலை­தூக்­கின. அவை பற்றி விசாரிக்க மருத்­து­வம், ஊரக நலப்­பணி­ இயக்­கு­நர் மூலம் இம்மா­தம் 13ஆம் தேதி உயர்­மட்ட விசா­ரணைக் குழு அமைக்­கப்­பட்­டது.

இந்த விவ­கா­ரத்­தில் வாடகைத் தாய் முறைக்­கான வழி­காட்டி நெறி­மு­றை­கள் மீறப்­ப­ட­வில்லை என்று உயர்­மட்டக் குழு விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ளது.

இதையடுத்து நயன்­தாரா-விக்­னேஷ் சிவன் தம்­பதி மீது தவ றில்லை என்று முடிவு செய்யப்பட்டது.