ராணிப்பேட்டை: ஆற்காடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகளை ராணிப்பேட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கோவில்களில் இருந்து கடத்தி வரப்பட்ட சிலைகள் அவ்வீட்டில் உள்ளதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் காவல்துறை அதிரடி சோதனை மேற்கொண்டது. அப்போது முருகப்பெருமான், மாரியம்மன் சிலைகள் இருப்பதைக் கண்டுபிடித்ததாகவும் அச்சிலைகள் ஐம்பொன்னால் செய்யப்பட்டவை என்பது தெரிய வந்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மூன்று பேர் கைதாகினர். சிலைகளின் மதிப்பு குறித்து விவரம் தெரியவில்லை.

