2,120 பேர் ஏமாந்தனர்: இணைய மோசடி குறித்து காவல்துறை மீண்டும் எச்சரிக்கை

2,120 பேர் ஏமாந்தனர்: இணைய மோசடி குறித்து காவல்துறை மீண்டும் எச்சரிக்கை

2 mins read
11def6f2-c9eb-4c5f-bf12-6ba2619d28c4
-

சென்னை: நடப்பு ஆண்­டில் மட்­டும் தமி­ழ­கத்­தில் இரண்­டா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் இணை­யம் வழி அரங்­கே­றும் மோச­டி­கள் கார­ண­மாக பணத்தை இழந்­துள்­ள­னர்.

இத்­த­க­வலை வெளி­யிட்­டுள்ள காவல்­து­றை­யின் இணைய குற்­றங்­கள் தடுப்­புப் பிரிவு, பொது­மக்­கள் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்க வேண்­டும் என அறி­வு­றுத்தி உள்­ளது.

தமி­ழ­கத்­தில் நடப்­பாண்டு மட்­டும், 'ஆன்­லைன் வேலை­வாய்ப்பு' என்ற பெய­ரில் நடந்த மோச­டி­யில், 2,120 பேர் பணத்­தைப் பறி­கொ­டுத்­துள்­ள­தாக காவல்­துறை தெரி­வித்­துள்­ளது.

படிப்பை முடித்து, வேலையை எதிர்­நோக்கி காத்­தி­ருக்­கும் இளை­யர்­கள், பெண்­க­ளுக்கு பகுதி நேர, முழு நேர வேலை வாய்ப்பு பெற்­றுக்­கொ­டுக்க பல இணை­ய­நி­று­வ­னங்­கள் உள்­ளன என்­றும் அந்­நி­று­வ­னங்­களில் தங்­கள் பெய­ரைப் பதிவு செய்­துள்­ள­வர்­க­ளின் விவ­ரங்­களை மோச­டிப் பேர்­வ­ழி­கள் திரு­டி­வி­டு­வ­தா­க­வும் காவல்­துறை சுட்­டிக்­காட்டி உள்­ளது.

"இவ்­வாறு விவ­ரங்­க­ளைத் திரு­டும் கும்­பல், அதே நிறு­வனங்கள் பெய­ரில், இளை­யர்களைத் தொடர்­பு­கொண்டு பணம் பறித்து வரு­கின்­றன. "அதன்­படி, தமி­ழ­கம் முழு­தும், 2021ல், 1,150 பேர் பணத்தைப் பறி­கொ­டுத்­த­னர். நடப்­பாண்­டில், கடந்த பத்து மாதங்­களில் மட்­டும், 2,120 பேர் அளித்த புகார்­படி, இணைய குற்­றத்தடுப்­பு காவல்துறையினர் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ள­னர். மேலும், 600க்கும் மேற்­பட்ட புகார்­கள் விசா­ர­ணை­யில் உள்­ளன," என காவல்­துறை அறிக்கை தெரி­விக்­கிறது.

பெரும்­பா­லான இணைய மோச­டி­க­ளுக்கு பொது மக்­க­ளின் அள­வுக்கு மீறிய ஆசை­தான் கார­ண­மாக அமை­கிறது என்­றும் வேலைக்குப் பதிவு செய்­துள்­ள­வர்­களுக்கு வரும் கைப்­பேசி குறுந்­த­க­வல்­களை மட்­டு­மன்றி, வாட்ஸ் அப், ஃபேஸ்­புக், இன்ஸ்­ட­கி­ராம் போன்ற சமூக ஊட­கங்­களில் பதி­வி­டப்­படும் தக­வல்­க­ளை­யும் கவ­ன­மு­டன் அணுக வேண்­டும் என்­றும் காவல்­துறை உய­ர­தி­கா­ரி­கள் அறி­வு­றுத்தி உள்­ள­னர்.

"இணை­யத்­தில் வெளி­வ­ரும் தக­வல்­கள் நம்­பத் தகுந்­த­வையா, உண்­மை­யா­கவே சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­க­ளால் வெளி­யி­டப்­பட்­ட­வையா என்­பதை உறுதி செய்­து­கொள்ள வேண்­டும். எந்த வகை­யில் கட்­ட­ணம் செலுத்த கோரி­னா­லும் அதை தவிர்க்க வேண்­டும்," என காவல்­துறை கூறி­யுள்­ளது.