திமுக: இந்தித் திணிப்பை எதிர்த்து பொதுக்கூட்டங்கள்

திமுக: இந்தித் திணிப்பை எதிர்த்து பொதுக்கூட்டங்கள்

1 mins read
b9d0a22a-f9e7-4fc8-88b4-207da6207be6
-

மதுரை: இந்­தித் திணிப்­புக்கு எதிர்ப்பு தெரி­விக்­கும் வகை­யில் திமுக சார்­பில் மாநி­லம் தழு­விய அள­வில் பொதுக்­கூட்­டங்­கள் நடத்­தப்­படும் என திமுக தலைமை அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்­கை­யில், இந்­தியை தீவி­ர­மாக திணிக்க வேண்­டும் என அலு­வல் மொழி தொடர்­பான நாடா­ளு­மன்ற நிலைக்­குழு, அதி­ப­ருக்கு அறிக்கை அளித்த செய்தி கிடைத்­த­தும் நாட்­டி­லேயே முதல் முதல்­வ­ராக மு.க.ஸ்டா­லின் அதை எதிர்த்து கண்­டன அறிக்கை வெளி­யிட்­ட­தா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"கடந்த அக்­டோ­பர் 18ஆம் தேதி சட்­டப்­பே­ர­வை­யில் தனித் தீர்­மா­னம் நிறை­வேற்றி குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்­கும் அனுப்­பி­னார் தமி­ழக முதல்­வர். இந்த தீர்­மா­னத்தை மக்­கள் மத்­தி­யில் விளக்­கி­டும் வகை­யி­லும் குழு அறிக்­கையை ஏற்­கக்­கூ­டாது என்று மத்­திய அரசை வலி­யு­றுத்­தி­யும் நவ.4ஆம் தேதி அனைத்து மாவட்­டங்­க­ளி­லும், இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்­மான விளக்க பொதுக்­கூட்­டங்­கள் நடத்­தப்­ப­டு­கிறது.

"பெரம்­ப­லூ­ரில் நடை­பெ­றும் கூட்­டத்­தில் முதல்­வர் மு.க.ஸ்டா­லின், அமைச்­சர் கே.என்.நேரு, ஆ.ராசா எம்பி உள்­ளிட்­டோர் பங்­கேற்­கின்­ற­னர்," என்று திமுக தலைமை வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமி­ழ­கத்­தில் இந்­தித் திணிப்­புக்கு எதி­ரான போராட்­டம் தீவி­ர­ம­டைந்து வரு­வ­தாக ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.