கோவை: கோவையில் உள்ள உக்கடம் சங்கமேஸ்வரர், டவுன் ஹால் கோனியம்மன், புளியங்குளம் விநாயகர் கோவில் உள்ளிட்ட மூன்று கோவில்களைத் தகர்ப்பதற்குத் தாங்கள் திட்டம் தீட்டியிருந்ததாக விசாரணையின்போது அதிர்ச்சி யூட்டும் தகவலை அப்சர் கான் என்ற கைதி தெரிவித்துள்ளார்.
இவர், அண்மையில் கார் வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் என்று கூறப்படுகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம், கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23ஆம் தேதி நடந்த ஒரு கார் விபத்தில் அதில் இருந்த சமையல் எரிவாயு உருளை வெடித் துச் சிதறியது.
இவ்விபத்தில் காரை ஓட்டிச் சென்ற ஜமேஷா முபின் இறந்தார்.
அவரது வீட்டில் நடத்திய சோத னையில் 75 கிலோ வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன. முபினின் நண்பர்கள் ஐவர் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
அதன்பிறகு, ஆறாவதாக முபினின் உறவினர் அப்சர் கான் கைது செய்யப்பட்டார்.
ஐவரையும் நவம்பர் 8ஆம் தேதி வரை கோவை மத்திய சிறை யில் அடைக்க கோவை நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் உத்தரவிட்டார்.
இதனிடையே, தமிழக காவல் துறை நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கார் வெடிப்புத் தாக்குதல், பயங் கரவாத சிந்தனை கொண்டவர்கள் கையாளும் 'தனி ஒருவரின் தாக்குதல்' முறையை ஒத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மூன்று 'டிரம்'களில் வெடி மருந்துடன் ஆணி, பால்ரஸ் கோலிக் குண்டுகள் உள்ளிட்டவற்றை நிரப்பி காரில் வைத்துக்கொண்டு அதனை கோயில் முன்பாக நிறுத்தி சமையல் எரிவாயு உருளையில் இருந்து வாயுவைத் திறந்துவிட்டு ஜமேஷா முபின் தற்கொலைப் படை தாக்கு தல் நடத்தியிருக்க வாய்ப்புள்ளதாக காவலர்கள் சந்தேகித்துள்ளனர்.
இதற்கிடையே, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில், கோவை கார் வெடிப்புச் சம்பவம் தொடா்பாக ஜமேஷா முபின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடா், தீப்பெட்டி, சிவப்பு பாஸ்பரஸ், கண்ணாடிகள், சிறு ஆணிகள், கையுறைகள், ஜிஹாத் வரிகள் கொண்ட நோட்டுகள் உட்பட 109 வகையான பொருள்கள் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சமையல் எரிவாயு உருளை வெடித்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதேவேளையில், வெடிபொருள் வெடித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை கார் குண்டு வெடிப்பு வழக்குத் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) தலைமை விசாரணை அதிகாரியாக என்ஐஏ ஆய்வாளர் எஸ். விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளாா். இவ்வழக்கு சென்னை பூந்தமல்லி யில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

