சென்னை: இலங்கையில் இருந்து கடல்வழியாக கடத்தி வரப்பட்ட ரூ.18 கோடியே 34 லட்சம் மதிப்புள்ள 35.6 கிலோ தங்கக் கட்டிகளைச் சென்னை வருவாய்ப் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அத்துடன், தங்கத்தைக் கடத்தி வந்த மூவரைக் கைது செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறு கையில், "தங்கம் கடத்தி வரப்படுவ தாக எங்களுக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்ததை அடுத்து, மதுரை-ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் விழிப்பு நிலையில் சோதனையில் ஈடுபட்டோம்.
"அப்போது, அவ்வழியாக காரில் வந்த மூவரை மடக்கிப் பிடித்து, அவர்களது காரை சோதித்தபோது காரில் தங்கம் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
"மூவரிடமும் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இலங்கையில் இருந்து தமிழக கடற்கரை வழியாக தங்கம் கடத்தி வந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர். யாருக்காக தங்கம் கடத்தி வரப் பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது," என்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகள். படம்: தமிழக ஊடகம்

