சென்னை: உலக சிக்கன நாள் நேற்று 30ஆம் தேதி உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இத்தினத்தை ஒட்டி, அஞ்சலகங்களில் சிறு சேமிப்புக் கணக்கைத் தொடங்கும்படி மக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
ஒரு பொருளை இது 'தேவையா?' என்று பலமுறை சிந்தித்து வாங்கு வதில் சிக்கனம் தொடங்குவதாகக் கூறியுள்ள ஸ்டாலின், வாழ்க்கை யைக் கவனமாக அணுகுபவர்கள், வருமானத்தில் பெரும்பகுதியைச் சேமித்து வைப்பதாவும் கூறுகிறார்.
"தங்களது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை சேமிப்புக்கும் பத்தில் ஒரு பங்கை பொழுதுபோக்குக்காகவும் செலவழிப்பவர்களே வளமான வாழ்க்கை வாழமுடியும். சேமிப்பால் ஒருவரது வாழ்க்கை நம்பிக்கைக்கு உரியதாக மாறும். சேமிப்பதுடன் அதைச் சரியான முறையில் முதலீடு செய்வதும் முக்கியம். இந்த உலக சிக்கன நாளில் தமிழக மக்கள் அனைவரும் இல்லத்துக்கு ஓர் அஞ்சலக தொடர் சேமிப்புக் கணக்கை அருகில் உள்ள அஞ்சலகங்களில் தொடங்கி பயன்பெற வேண்டும்," என்று ஸ்டா லின் கேட்டுக்கொண்டுள்ளார்.
"மக்கள் தங்களது சேமிப்புத் தொகையைப் பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்தால்தான் தேவைப்படும் நேரத்தில் அதைத் திரும்பப் பெறமுடியும்.
"இந்தச் சூழலில், அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சிறுசேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பானவை. எனவே, மக்கள் அனைவரும் சிக்கனத்தைக் கடைப்பிடித்து, சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வாழ்க்கையில் மேன்மை நிலையை அடையும்படி கேட்டுக் கொள்கிறேன்," என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

