ராம்குமார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

ராம்குமார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

1 mins read
5631c436-6a49-4132-ac1f-4fb4b64b0c2f
சுவாதி-ராம்குமார். படம்: ஊடகம் -

சென்னை: சிறை­யில் சந்­தே­கப்­படும் விதத்­தில் உயி­ரி­ழந்த ராம் குமா­ரின் குடும்­பத்­திற்கு ரூ.10 லட்­சம் இழப்­பீடு வழங்­கும்­படி தமி­ழக அர­சுக்கு மாநில மனித உரி­மை­கள் ஆணை­யம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

ராம்­கு­மார் மர­ணத்­தில் சந்தே கம் இருப்­ப­தாக அவ­ரது தந்தை புகார் அளித்­தி­ருந்­தார்.

இதை­ய­டுத்து, ராம்­கு­மார் மர ணம் குறித்து மீண்­டும் சுதந்­தி­ர­மான விசா­ர­ணையை நடத்த அர­சுக்கு மனித உரிமை ஆணை யம் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சென்­னை­யில் உள்ள இன்­ஃபோ­சிஸ் தக­வல் தொழில்­நுட்ப நிறு­வன ஊழி­ய­ரான சுவாதி என்­னும் இளம்­பெண் சென்னை நுங்­கம்­பாக்­கம் ரயில் நிலை­யத்­தில் கொல்­லப்­பட்­டார்.

இவ்­வ­ழக்கு தொடர்­பாக செங்­கோட்­டைக்கு அருகே மீனாட்­சி­புரம் பகுதியில் வசித்த ராம்­குமார் என்ற இளை­ஞர் கைது செய்­யப்­பட்டு புழல் சிறையில் அடைக்­கப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், 2016ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் 17ஆம் தேதி சிறை வளா­கத்­தில் இருந்த மின்­கம்­பி­யைக் கடித்து அவர் இறந்­து­விட்­ட­தாக சிறைத்துறையினர் அறி­வித்­த­னர்.