சென்னை: சிறையில் சந்தேகப்படும் விதத்தில் உயிரிழந்த ராம் குமாரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்படி தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராம்குமார் மரணத்தில் சந்தே கம் இருப்பதாக அவரது தந்தை புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, ராம்குமார் மர ணம் குறித்து மீண்டும் சுதந்திரமான விசாரணையை நடத்த அரசுக்கு மனித உரிமை ஆணை யம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சென்னையில் உள்ள இன்ஃபோசிஸ் தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியரான சுவாதி என்னும் இளம்பெண் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொல்லப்பட்டார்.
இவ்வழக்கு தொடர்பாக செங்கோட்டைக்கு அருகே மீனாட்சிபுரம் பகுதியில் வசித்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி சிறை வளாகத்தில் இருந்த மின்கம்பியைக் கடித்து அவர் இறந்துவிட்டதாக சிறைத்துறையினர் அறிவித்தனர்.

