தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கோவை கார் வெடிப்பு எதிரொலி: மஞ்சக்கொல்லை, சிக்கல், திருப்பூரில் தொடரும் சோதனை ஆறு பேரிடம் மீண்டும் விசாரணை

2 mins read
493a951f-7f4c-4e3d-a101-1dd16f371401
-

கோயம்­புத்­தூர்: கார் வெடிப்­புச் சம்­ப­வம் தொடர்­பாக கோவை­யில் முகாமிட்டுள்ள தேசியப் புல­னாய்வு முகமை (என்­ஐஏ) அதி­கா­ரி­கள் தங்களது விசா­ர­ணை­யைத் தொடங்கி உள்­ள­னர்.

சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்ள ஆறு பேரை மீண்­டும் காவ­லில் எடுத்து விசா­ரிக்­க உள்­ள­தா­கவும் கூறியுள்­ள­னர்.

கோவை மாவட்டம், உக்­க­டம் அருகே உள்ள கோட்டை ஈஸ்­வரன் கோயில் பகுதியில் கடந்த 23ஆம் தேதி அதி­காலை நேரத்தில் கார் வெடித்ததில் ஜமேஷா முபின், 28, உயி­ரி­ழந்­தார்.

இச்சம்­ப­வம் தொடர்பில் ஆறு பேர் கைதான நிலை­யில், என்­ஐஏ வசம் இந்த வழக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. காவல் ஆய்­வா­ளர் ஸ்ரீஜித் மேற்­பார்­வை­யில் என்­ஐஏ அதி­காரி­கள் அறு­வர் நேரில் வந்து கார் வெடித்த இடத்­தில் நேற்று முன்தினம் ஆய்வு செய்­த­னர்.

கோயில் அர்ச்சகர், நிர்­வாகி, கோயில் அருகே இருந்­த­வர்­க­ளி­டம் விசா­ரணை நடத்தி, கோவி லிலும் வெளிப்­புறப் பகு­தி­க­ளி­லும் பொருத்­தப்­பட்­டி­ருந்த கண்­கா­ணிப்­புக் கேம­ராக்­களையும் ஆய்வு செய்­த­னர்.

என்­ஐஏ அதி­கா­ரி­க­ளுக்கு உத­வி­யாக 14 காவ­லர்­கள் கொண்ட குழுவினர் அமைக்­கப்­பட்டு உள்­ளனர். உள­வுப் பிரிவு காவ­லர்­களும் ரக­சியக் கண்­கா­ணிப்பை முடுக்கி­விட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், சந்­தே­கப்­ப­டும்­படி உள்­ள­வர்­க­ளின் இல்­லங்­க­ளி­லும் விசா­ரணை நடத்தப்பட்டுள்ளது.

நாகப்­பட்­டி­னம் மாவட்­டம், மஞ்­சக்­கொல்­லை­யைச் சேர்ந்த ஹாரிஸ் முக­மது, 38, சிக்­கல் பகு­தி­யைச் சேர்ந்த அசன் அலி, 35, ஆகிய இரு­வ­ரின் வீடு­க­ளி­லும் 10 காவ லர்கள் சோதனை நடத்­தி­னர்.

இந்­தச் சோத­னை­யில் எந்த ஆவ­ண­மும் கிடைக்­க­வில்லை என் றும் கூறப்­ப­டு­கிறது.

இதே­போல், திருப்­பூர் மாவட்­டம், ராக்­கி­யா­பா­ளை­யம் அருகே வசித்து வரும் அப்­துல் ரசாக், 32, என்­ப­வ­ரின் வீட்­டி­லும் மாந­கர காவல்­துறை­யி­னர் விசா­ரணை நடத்­தி­னர்.

இலங்­கை­யில் நடந்த குண்டு வெடிப்­புச் சம்­ப­வம் தொடர்­பாக கடந்த 2017ல் ரசாக்­கி­டம் என்­ஐஏ அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்தி அவரை விடு­வித்தனர்.

இத­னி­டையே, கோவை கார் வெடிப்­புச் சம்­ப­வத்­தின் எதி­ரொ­லி­யாக மாநி­லம் முழு­வ­தும் பாது­காப்பாக இருக்க முன்­னெச்­ச­ரிக்கை நட­வடிக்­கை­களை காவ­லர்­கள் முடுக்கி­விட்­டுள்­ள­னர்.

சென்­னை­யில் பேர­ணி­கள், ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்­த­வும் இம்­மா­தம் 14ஆம் தேதி இரவு வரை தடைவிதித்து சென்னை காவல் ஆணை­யர் சங்­கர் ஜிவால் உத்­தரவு பிறப்­பித்­துள்­ளார்.

அத்துடன், சென்­னை­யில் சாலை­யோ­ரம் கேட்­பா­ரற்ற நிலை­யில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த 1,027 வாக­னங்­க­ளைப் பறி­மு­தல் செய்து விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், முபின் காரில் சமை­யல் எரி­வாயு உரு­ளையை ஏற்­றிய சகோ­த­ரர்­கள் ஃபைரோஸ், நவாஸ், அண்டை வீட்­டுக்­கா­ர­ரான முக­மது ரியாஸ் ஆகிய மூவரும் அவர்­க­ளது தாயார் அறி­வு­ரை­யின்­படி காவல்­நி­லை­யத்­தில் சர­ண­டைந்­துள்­ள­னர்.