கொட்டும் மழையில் கிராம மக்கள் போராட்டம்

1 mins read
eb11e415-be9c-4810-999d-c4fbf83822c8
-

சென்னை: பரந்­தூர் விமான நிலை­யத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்து வரும் அப்­ப­குதி மக்­களில் ஒரு தரப்­பி­னர் கிராம சபைக் கூட்­டத்­தில் விமான நிலை­யப் பணி­க­ளுக்கு எதி­ராக மீண்­டும் தீர்­மா­னம் நிறை­வேற்றி உள்­ள­னர்.

புதிய விமான நிலை­யம் அமைந்­தால் தங்­க­ளுக்கு பாதிப்பு ஏற்­படும் என 13 கிரா­மங்­க­ளைச் சேர்ந்த மக்­கள் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

ஏக­னா­பு­ரம், பரந்­தூர், தண்­ட­லம், நெல்­வாய், மேலேறி உள்­ளிட்ட கிரா­மங்­க­ளைச் சேர்ந்த பொது­மக்­கள் இது தொடர்­பாக பல்­வேறு போராட்­டங்­களைத் தொடர்ந்து நடத்தி வரு­கின்­ற­னர்.

குறிப்­பாக, ஏக­னா­பு­ரம் கிராம மக்­கள் கிராம சபைக் கூட்­டத்­தில் தங்­கள் எதிர்ப்பை பதிவு செய்­யும் வித­மாக இரண்டு முறை தீர்­மா­னம் நிறை­வேற்றி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், விளை­நி­லங்­க­ளை­யும் குடி­யி­ருப்­பு­க­ளை­யும் இழக்க நேரி­டு­வ­தாக குறிப்­பிட்­டுள்ள அக்­கி­ராம மக்­கள், நேற்று முன்­தி­னம் கிராம சபைக் கூட்­டத்தை நடத்தி மூன்­றா­வது முறை­யாக தீர்­மா­னம் நிறை­வேற்றி உள்­ள­னர்.

மேலும், நேற்று முன்­தி­னம் கொட்­டும் மழை­யி­லும் அக்­கி­ராம மக்­கள் 98வது நாளாக பரந்­தூர் விமான நிலை­யம் அமைக்க எதிர்ப்பு தெரி­வித்து, கண்­டன முழக்­கங்­களை எழுப்பி தொடர் போராட்­டத்­தி­லும் ஈடு­பட்­ட­னர்.

தங்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரங்­கள் குறித்து மத்­திய, மாநில அர­சு­கள் பரி­சீ­லிக்க வேண்­டும் என கிராம மக்­கள் தெரி­வித்தனர்.