பச்சிளங்குழந்தையை விற்க முயன்றவர்கள் பிடிபட்டனர்

பச்சிளங்குழந்தையை விற்க முயன்றவர்கள் பிடிபட்டனர்

1 mins read
dd9e06fe-ce09-4e70-8571-f3a145ccfe5d
-

சேலம்: பிறந்து நான்கு நாள்­களே ஆன பச்­சி­ளங்குழந்­தையை விற்க முனைந்த மூவ­ரைக் காவல்­து­றை­யி­னர் கைது செய்­துள்­ள­னர்.

ஏற்­கெ­னவே இரண்டு பெண் குழந்­தை­கள் இருந்த நிலை­யில் மூன்­றா­வது குழந்­தையை விற்க முடி­வெ­டுத்­தார் கஸ்­தூரி எனும் பெண். கஸ்­தூ­ரி­மேல் அவ­ரது கண­வர் சந்­தே­கப்­பட்­ட­தால் கர்ப்­ப­கா­லத்­தி­லேயே அவர் தனது சகோ­தரி வீட்­டில் வசித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில் தனது சகோ­த­ரி­யின் தோழி வளர்­மதி எனும் மாதி­டம் நான்கு நாளான சிசு­வைக் கொடுத்­தார்.

வளர்­ம­தி­யும் அவ­ரது கண­வர் மதி­ய­ழ­க­னும் லதா எனும் இடைத்­த­ர­கர் மூலம் எடப்­பா­டி­யைச் சேர்ந்த அன்பு எனும் ஆட­வ­ரி­டம் ஐந்து லட்ச ரூபாய்க்­குக் குழந்­தையை விற்க முயன்றனர். இந்தத் தக­வல் அறிந்து காவல்­து­றை­யி­னர் அவர்­க­ளைக் கைது செய்­த­னர்.

அன்பு தலை­ம­றை­வாகி விட்­ட­தா­க­வும் அதி­கா­ரி­கள் அவ­ரைத் தேடி வரு­வ­தா­க­வும் கூறப்­பட்­டது.

வளர்­ம­தி­யும் லதா­வும் கரு­முட்டை விற்­ப­னை­யில் ஈடு­பட்­ட­தா­க­வும் தெரி­ய­வந்­துள்­ளது.