சென்னை ரயில் நிலையத்தில் 2.70 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை ரயில் நிலையத்தில் 2.70 கிலோ தங்கம் பறிமுதல்

1 mins read
fb4601d4-0222-483a-ba34-bfc095378d3e
ரயில்வே பாதுகாப்புப் படை குற்றப்புலனாய்வுக் காவல்துறையினர் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 2.5 கிலோ தங்க பிஸ்கட்டுகளையும் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். -

சென்னை: சென்னை மத்­திய ரயில் நிலை­யத்­தில் உரிய ஆவ ணங்­கள் இன்றி கொண்டு வரப்­பட்ட 2.70 கிலோ தங்­கத்­தை­யும் 16 லட்­சம் ரூபாய் ரொக்­கத்­தை­யும் பறி­மு­தல் செய்து மூவ­ரைக் காவல் துறை­யி­னர் கைது செய்­த­னர்.

சென்னை மத்­திய ரயில் நிலை யத்­தில் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த ரயில்வே பாது­காப்­புப் படை­யின் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு காவல்­து­றை­யி­னர் தீவிர சோத­னை­யில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது, ரயி­லில் இருந்து கீழே இறங்­கிய ஆந்­திர மாநி­லம், நெல்­லூர் மாவட்­டத்­தைச் சேர்ந்த நாரா­யண ரெட்டி, 43, ஸ்ரீதர், 54, கோபி கிருஷ்­ணன், 56, ஆகி­யோ­ரின் பைக­ளைச் சோதித்­த­னர்.

அவற்­றில், 2.7 கிலோ தங்­க­மும் 16 லட்ச ரூபாய் ரொக்­க­மும் இருந்­தன. ஆனால், அதற்­கான ஆவ­ணங்­கள் அவர்­க­ளி­டம் இல்லா­த­தால் வரு­மான வரி அதி­காரி­க­ளி­டம் அனைத்­தும் ஒப்­படைக்­கப்­பட்­டன. மூவ­ரி­ட­மும் விசா­ரணை நடக்­கிறது.