சென்னை: சென்னை மத்திய ரயில் நிலையத்தில் உரிய ஆவ ணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 2.70 கிலோ தங்கத்தையும் 16 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்து மூவரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை மத்திய ரயில் நிலை யத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, ரயிலில் இருந்து கீழே இறங்கிய ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாராயண ரெட்டி, 43, ஸ்ரீதர், 54, கோபி கிருஷ்ணன், 56, ஆகியோரின் பைகளைச் சோதித்தனர்.
அவற்றில், 2.7 கிலோ தங்கமும் 16 லட்ச ரூபாய் ரொக்கமும் இருந்தன. ஆனால், அதற்கான ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் வருமான வரி அதிகாரிகளிடம் அனைத்தும் ஒப்படைக்கப்பட்டன. மூவரிடமும் விசாரணை நடக்கிறது.

