சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் நாடு முழுவதும் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என திராவிட இயக் கத் தமிழர் பேரவை எச்சரித்துள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிப் பேசுவதாகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்து வதாகவும் ஆளுநர் மீது குற்றச்சாட்டுகள் கூறப்படும் நிலையில், அவரை நீக்க வலியுறுத்தி மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சி எம்பிக்கள் அதிபரிடம் மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில், ஆளுநர் ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
இதுகுறித்து ஆயிரம் விளக்குத் தொகுதியின் திமுக எம்எல்ஏ எழிலன் செய்தியாளர்களிடம் பேசிய போது, "அரசியலமைப்புச் சட்டத்தின்படி இயங்க மறுக்கும் எந்த சக்தியாக இருந்தாலும் அதனை நாம் தகர்க்கவேண்டும்," என்றார்.
வரம்பு மீறி ஆளுநர் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன், "யாராக இருந்தாலும் சட்டத்துக்கு உட்பட்டவர்களாகச் செயல்படவேண்டும்," என வலியுறுத்தினார்.


