தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பயங்கரவாத அமைப்புகளுடன் 102 பேர் தொடர்பு; மூவர் கைது

2 mins read
b25263b4-fcdf-42e2-8e09-506e14acbaec
-

சென்னை: தமி­ழ­கத்­தில் ஐ.எஸ் உள்­ளிட்ட பயங்­கரவாத அமைப்­பு ­க­ளு­டன் தொடர்­பில் இருப்­ப­வர்­கள் என 102 பேர் அடை­யா­ளம் காணப்­பட்டு உள்­ள­னர். இந்த நிலை­யில் சந்தேக நபர்களில் மூவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கோவை, உக்­க­டம் பகு­தி­யில் கோட்டை ஈஸ்­வ­ரன் கோவில் அருகே அக்­டோ­பர் 23ஆம் தேதி கார் குண்­டு­வெ­டிப்பு நிகழ்த்­தப்­பட்­டது.

இதில், ஐ.எஸ். பயங்­க­ர­வாதி ஜமேஷா முபின், 29, தற்­கொ­லைப் படைத் தாக்­கு­தல் நடத்தி பலி­யா­னார்.

இதன் பின் இவ­ரது கூட்­டா­ளி­கள் ஆறு பேர் கைது செய்­யப்­பட்டு அவர்­க­ளின் வீடு­கள் உட்­பட தமி­ழ­கம் மற்­றும் கேர­ளா­வில் வியா­ழன் அன்று 43 பேரின் வீடு­களில் என்ஐஏ எனும் தேசிய புலா­னய்வு முக­வை­யின் அதி­கா­ரி­கள் சோதனை நடத்தி முக்­கிய ஆவ­ணங்­க­ளைக் கைப்­பற்­றி­னர்.

இந்த நிலை­யில் தமி­ழ­கத்­தில் ஐ.எஸ். உள்­ளிட்ட தடை செய்­யப்­பட்ட பயங்­க­ர­வாத அமைப்­பு­க­ளு­டன் தொடர்­பில் இருப்­ப­வர்­கள் என 102 பேர் அடை­யா­ளம் காணப்­பட்­ட­னர் என்று தின­ம­லர் தக­வல் தெரி வித்தது.

இவர்­க­ளி­டம் காவல்­துறை தொடர்ந்து விசா­ரணை நடத்தி வரு­கிறது.

இதற்­கி­டைேய சென்னை, மண்­ணடி மரைக்­கா­யர் தெரு­வில் உள்ள அலு­வ­ல­கம் ஒன்­றில் 2021 மார்ச் மாதம் சுங்­கத்துறை அதி­கா­ரி­கள் சோத­னை­யி­டச் சென்­ற­னர்.

அப்­போது, அங்­கி­ருந்த மூன்று பேர் அதி­கா­ரி­களை தடுத்து தக­ரா­றில் ஈடு­பட்­ட­னர்.

இது குறித்து, வடக்கு கடற்­கரை காவல் நிலை­யத்­தில் புகார் அளிக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து வழக்­குப் பதிவு செய்­யப்­பட்டு மண்­ண­டி­யைச் சேர்ந்த மூவ­ரும் வெள்­ளிக்­கி­ழமை கைது செய்­யப்­பட்­ட­னர்.

இவர்­க­ளி­டம் பறி­மு­தல் செய்யப்­ பட்­ட­தாக நம்­பப்­படும் 50 லட்­சம் ரூபாய், 16 லட்­சம் ரூபாய்க்­கான வெளி­நாட்டுப் பணம் உள்­ளிட்­டவை வரு­மான வரித் துறை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

கைதான மூவ­ரில் இரு­வ­ருக்கு பயங்­க­ர­வாத அமைப்­பு­டன் தொடர்பு இருப்­ப­தாக சந்­தே­கிக்­கப்­பட்டு சில ஆண்­டு­க­ளுக்கு முன் ராஜஸ்­தா­னில் இருந்து வந்த என்.ஐ.ஏ. அதி­கா­ரி­கள், இவர்­க­ளது அலு­வ­ல­கத்­தில் சோதனை நடத்­தி­னர் என்று காவல்­துறை கூறி­யது.