புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு முற்றிலும் ஏற்க முடியாதது," என்றார்.
"முற்றிலும் தவறானது. இந்தத் தீர்ப்பை காங்கிரஸ் கட்சி தெளிவாக விமர்சிக்கிறது. இந்தியாவின் மனநிலைக்கு ஏற்ப உச்ச நீதிமன்றம் செயல்படாதது மிகவும் துரதிருஷ்டவசமானது," என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
காங்கிரஸ் தலைமையகத்தில் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரான அபிஷேக் சிங், ஆறு பேர் விடுதலை குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, நாட்டின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. அரசியல் உலகத்தின் அனைத்து தரப்பிலும் பலத்த கவலைகளையும் விமர்சனத்தையும் உண்டாக்கி உள்ளது," என்று சொன்னார்.

