சென்னை: பொருளா தாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை யடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆலோசனை நடத்தியது.
தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை யில் இந்தக் கூட்டம் நடை பெற்றது.
அதில், சமூக நீதித் தத்துவத்தின் உண்மை விழுமியங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

