பாஜக நிர்வாகிகளிடம் அமித் ஷா ஆலோசனை

பாஜக நிர்வாகிகளிடம் அமித் ஷா ஆலோசனை

1 mins read
21fdb799-21c7-46ba-96dc-30ad2ce2f3ea
கமலாலயத்தில் நிர்வாகிகளைச் சந்தித்த அமித் ஷா.படம்: இந்திய ஊடகம் -

சென்னை: பார­திய ஜனதா தலைமை அலு­வ­ல­க­மான கம­லா­ல­யத்­தில் தேர்­தல் கூட்­டணி குறித்து கட்சி நிர்­வா­கி­க­ளு­டன் மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா ஆலோ­சனை நடத்­தி­னார்.

இந்­தக் கூட்­டத்­தில் தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை, வானதி சீனி­வா­சன் உள்­ளிட்ட நிர்­வா­கி­கள் பங்­கேற்­ற­னர். நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யிட பாஜக கூட்­ட­ணி­யில் இதர கட்­சி­ களைச் சேர்ப்­பது குறித்து ஆலோ­சிக்­கப்­பட்­டது.

இந்­தக் கூட்­டத்­திற்­குப் பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய பாஜக மாநி­லத் தலை­வ­ரான அண்­ணா­மலை, தமி­ழக மக்­க­ளின் அன்­புக்கு பிர­த­மர் உள்­ளா­கி­யுள்­ளார் என்­றார்.

"பிர­த­மரை சந்­திக்க வாய்ப்பு கிடைத்­தது. அப்­போது தமி­ழக மக்­கள், செயல்­பாடு குறித்து அவர் கேட்­ட­றிந்து கொண்­டார். கொட்­டும் மழை­யி­லும் பெண்­கள் கைக்­கு­ழந்­தை­யு­டன் பிர­த­மரை வர­வேற்­றது நெகிழ்ச்சி அளிக்­கிறது. பிர­த­மர் மோடி, அமித் ஷா வருகை புதிய உற்­சா­கத்தை ஏற்­ப­டுத்­தி­உள்­ளது," என்று அண்­ணா­மலை தெரி­வித்­தார்.