சென்னை: பாரதிய ஜனதா தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தேர்தல் கூட்டணி குறித்து கட்சி நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட பாஜக கூட்டணியில் இதர கட்சி களைச் சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை, தமிழக மக்களின் அன்புக்கு பிரதமர் உள்ளாகியுள்ளார் என்றார்.
"பிரதமரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது தமிழக மக்கள், செயல்பாடு குறித்து அவர் கேட்டறிந்து கொண்டார். கொட்டும் மழையிலும் பெண்கள் கைக்குழந்தையுடன் பிரதமரை வரவேற்றது நெகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி, அமித் ஷா வருகை புதிய உற்சாகத்தை ஏற்படுத்திஉள்ளது," என்று அண்ணாமலை தெரிவித்தார்.

