தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான அணைகள் திறப்பு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வெள்ளத்தில் தமிழகம்: கனமழை நீடிக்கும்

3 mins read
a9c3e5ce-ad11-43c9-abef-a5f6b913b058
முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார். படம்: ஊடகம் -

கட­லூர்: தமி­ழ­கம் முழு­வ­தும் கடந்த சில நாள்­க­ளா­கக் கொட்­டித்­தீர்க்­கும் கன­ம­ழை­யால் மாநி­லத்­தில் உள்ள பெரும்­பா­லான அணை­கள் நிரம்பி உள்­ளன. இதை­ய­டுத்து அந்த அணை­கள் திறக்­கப்­பட்­டுள்­ள­தாக தமி­ழக அரசு தெரி­வித்­துள்­ளது.

தமி­ழ­கத்­தில் வட­கி­ழக்­குப் பரு­வ­மழை தீவி­ர­ம­டைந்­துள்­ளது. இதன் கார­ண­மாக பெரும்­பா­லான மாவட்­டங்­களில் அண்­மைய சில நாள்­க­ளாக கன­மழை நீடித்து வரு­கிறது.

தமி­ழக அணை­க­ளுக்­கான நீர்ப்­பி­டிப்­புப் பகு­தி­களில் பெய்த பலத்த மழை கார­ண­மாக மேட்­டூர், கேஆர்பி, வைகை அணை என மாநி­லம் முழு­வ­தும் உள்ள அனைத்து அணை­களுக்குமான நீர்வரத்து தொடர்ந்து அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது.

காவிரி டெல்டா மாவட்­டங்­களுக்கு முக்­கிய நீர் ஆதா­ர­மாக உள்ள மேட்­டூர் அணைக்கு தற்­போது நீர்வரத்து 20,200 கன­ அ­டி­யாக அதி­க­ரித்­துள்­ளது.

ஏற்­கெ­னவே அணை­யின் நீர்­மட்­டம் 120 அடி­யாக உள்­ள­தால், இந்த உபரி நீர் அப்­ப­டியே வெளி­யேற்­றப்­பட்டு வரு­கிறது.

நேற்று முன்­தி­னம் மாலை நில­வ­ரப்­படி கிருஷ்­ண­கிரி மாவட்­டம் கேஆர்பி அணை­யின் நீர்­மட்­டம் 50.25 அடி­யாக இருந்­தது. விநா­டிக்கு 5,829 கன­ அடி தண்­ணீர் வந்­ததை அடுத்து, அது மொத்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­டது.

வைகை அணை­யின் மொத்த உய­ரம் 71 அடி என்­றும் அதில் தண்­ணீர் இருப்பு 70 அடி­யாக உள்­ளது என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

உபரி நீர் வெளி­யேற்­றப்­படும் நிலை­யில், நெல்லை மாவட்­டத்­தில் உள்ள பாப­நா­சம், சேர்­வ­லாறு, மணி­முத்­தாறு, தென்­காசி மாவட்­டத்­தில் உள்ள கட­னா­நதி, பைக்­காரா, சோலை­யார் என முக்­கி­ய­மான அணை­கள் அனைத்­துமே கிட்­டத்­தட்ட நிரம்­பி­விட்­டன.

அணை­களில் இருந்து கூடு­தல் நீர் வெளி­யேற்­றப்­ப­டு­வ­தால் பல்­வேறு மாவட்­டங்­களில் உள்ள கரை­யோரப் பகு­தி­களில் வசிக்­கும் பொது­மக்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்து வரும் நாள்­களில் மழை மேலும் வலுக்­கும் பட்­சத்­தில் வெள்­ளப்­பெ­ருக்கு அதி­க­ரிக்­கும் என்பதால் கவனம் தேவை என அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

குறை­கள் தீர்க்­கப்­படும் என முதல்­வர் உறுதி

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் தொடர் மழை­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள பொது­மக்­கள் தெரி­வித்த குறை­கள் உட­ன­டி­யாக சரி செய்­யப்­படும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

சீர்­காழி, மயி­லா­டு­து­றைக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்து மீட்­புப் பணி­கள் நடை­பெற்று வரு­வ­தா­க­வும் கட­லூ­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

வேலூர் மாவட்­டத்­தில் உள்ள அனைத்து ஆறு­க­ளி­லும் நீர்­வ­ரத்து அதி­க­ரித்­துள்­ள­தால் கரை­யோர மக்­க­ளுக்கு வெள்ள அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

அதே­போல், செங்­கல்­பட்டு மாவட்­டத்­தில் உள்ள 150 சிறு ஏரி­கள் முழு­மை­யாக நிரம்­பி­விட்­ட­தாக பொதுப்­ப­ணித்­துறை தெரி­வித்­துள்­ளது.

மது­ரை­யில் வைகை ஆற்­றில் வெள்­ளப்பெருக்கு ஏற்­பட்­டதை அடுத்து அங்கு தரைப்­பா­லங்­கள் மூழ்­கி­யுள்­ளன.

மூன்று நாள்­கள் மழை நீடிக்­கும்

இத்­த­கைய சூழ­லில், வளி­மண்­டல கீழ­டுக்கு சுழற்சி கார­ண­மாக தமி­ழ­கத்­தில் மேலும் மூன்று நாள்­கள் கன­மழை நீடிக்­கும் என வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­தது.

வங்­கக் கட­லில் கடந்த 10ஆம் தேதி குறைந்த காற்­ற­ழுத்த தாழ்வுப் பகுதி உரு­வா­னது. அது வலு­வடைந்த கார­ணத்­தால் சீர்­காழி­யில் 122 ஆண்­டு­கள் இல்­லாத வகை­யில் 44 சென்டி மீட்­டர் மழை பதி­வா­னது. அங்கு பெரும்­பா­லான பகு­தி­கள் வெள்­ளக்­கா­டாக காட்­சி­ அளிக்­கின்றன. மீட்பு, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, காஞ்­சி­பு­ரம், செங்­கல்­பட்டு உள்­ளிட்ட மாவட்­டங்­களில் நேற்று முன்­தி­னம் காலை வெயில் எட்­டிப் பார்த்த நிலை­யில், இரவு பலத்த மழை பெய்­தது.

இந்­நி­லை­யில் கேரள, தமி­ழ­கப் பகு­தி­களில் மீண்­டும் வளி­மண்­டல கீழ­டுக்கு சுழற்சி உரு­வாகி உள்­ளது என்­றும் இதன் கார­ண­மாக தமி­ழ­கத்­தில் மழை நீடிக்­கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்­கு­நர் பா.செந்­தா­ம­ரை­கண்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

இதற்கிடையே மீனவர்கள் அடுத்த இரு தினங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.