தவறான சிகிச்சையால் காற்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு மருத்துவர்களைக் கைது செய்யுங்கள்: பிரியா தந்தை

தவறான சிகிச்சையால் காற்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு மருத்துவர்களைக் கைது செய்யுங்கள்: பிரியா தந்தை

2 mins read
62a4635f-aa8b-401c-bfea-b7e948c6cc23
காற்பந்துப் பயிற்சியில் ஈடுபடும் பிரியா. படங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

சென்னை: மருத்­து­வர்­க­ளின் தவ றான சிகிச்­சை­யால் பிரியா என்ற காற்­பந்து வீராங்­கனை நேற்று காலை உயிர் நீத்­தார்.

"மாணவி பிரி­யா­வுக்கு கவ­னக்­கு­றை­வாக சிகிச்சை அளித்த இரு மருத்­து­வர்­களும் பணியிடை ­நீக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­னர். அவர்கள் மீது சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா. சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

பிரி­யா­வின் குடும்­பத்­திற்கு அரசு சார்­பில் ரூ.10 லட்­சம் நிவா­ர­ண­மும் குடும்­பத்­தில் உள்ள ஒரு­வ­ருக்கு அரசு வேலை­யும் வழங்­கப்­படும் எனவும் அவர் உறுதி கூறியுள்ளார்.

சென்னை வியா­சர்­பா­டி­யைச் சேர்ந்­த­வர் ரவிக்­கு­மார். இவ­ரது மகள் பிரியா, 17, அங்­குள்ள ராணி­மேரி கல்­லூ­ரி­யில் பட்­டப்­ப­டிப்பு படித்துவந்­தார்.

ஏழ்­மை­யான குடும்­பத்தில் பிறந்தவரான பிரியா, மாநில, தேசிய அள­வி­லான காற்பந்துப் போட்­டி­களில் கலந்துகொண்டு பல சாத­னை­க­ளைப் படைத்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், அண்­மை­யில் பயிற்­சி­யில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்தபோது பிரியாவின் காலில் தசைப் பிடிப்பு ஏற்­பட்டுள்ளது.

இதை­ய­டுத்து, தனது வீட்­டின் அருகே உள்ள கொளத்­தூர் அரசு மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டார்.

பிரி­யா­வைப் பரி­சோ­தித்த மருத்­து­வர்­கள், அவ­ரது வலது கால் மூட்­டுப் பகு­தி­யில் சவ்வு விலகி இருப்­ப­தா­கக் கூறி­யுள்­ள­னர். இதை யடுத்து அவ­ருக்கு அறுவை சிகிச்சை செய்­யப்­பட்­டுள்­ளது.

அதன்­பின்­ன­ரும் அவ­ரது கால் பாதிப்பு சரி­யா­கா­மல் வீக்­கம் ஏற்­பட்டதால், மேல்­சி­கிச்­சைக்­காகச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்கப்பட்டார்.

அங்கு நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­யில், அவ­ரது வலது காலில் ரத்த ஓட்­டம் தடைப்­பட்­ட­தும், அத­னால்தான் அறுவை சிகிச்­சைக்குப் பிறகு கால் வீங்­கி­ய­தும் தெரி­ய­வந்­தது. இது உயி­ருக்கு ஆபத்தை ஏற்­ப­டுத்­த­லாம் எனக்­கூறி அவ­ரது வலது கால் அகற்­றப்­பட்­டது.

தொடர்ந்து தீவிர சிகிச்­சை பெற்று வந்த பிரியா, சிகிச்சை பலன் தராமல் உயி­ரி­ழந்­தார்.

"பிரி­யா­வுக்கு சவ்­வு­தான் கிழிந்து உள்­ளது. இதற்குப் பெரிய மருத்­துவமனை எதுவும் தேவை­யில்லை," என மருத்­து­வர்­கள் கூறி­னர். ஆனால், அவர் உயி­ரி­ழப்­பார் என நாங்­கள் நினைத்­துக்­கூடப் பார்க்க வில்லை. மருத்­து­வர்­க­ளின் அலட்­சியப் போக்கு, தவ­றான சிகிச்சை முறையே எங்­கள் மகள் பிரியா உயிரிழக்கக் கார­ண­ம்.

"மருத்­து­வர்­க­ளின் அலட்­சி­யத்­தால் என் மக­ளின் ஆசை, கனவு, லட்­சி­யம் எல்­லாம் கானல் நீராகி விட்­டது. பிரியா இறப்­புக்கு காரண மான மருத்­து­வர்­க­ளைக் கைது செய்­ய­வேண்­டும்," என உயி­ரி­ழந்த பிரி­யா­வின் தந்தை ரவிக்­கு­மார் கண்­ணீர் மல்க கோரி­யுள்­ளார்.