சென்னை: மீன்தொட்டிக்குள் விழுந்த பொம்மையை எடுப் பதற்கு ஒரு குழந்தை முயற்சி செய்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த தொட்டிக்குள் கவிழ்ந்து உயிரிழந்தது.
சென்னை அம்பத்தூரில் வசிக்கின்றனர் யுவராஜ்-கௌசல்யா தம்பதியர். இவர்களது ஒன்றரை வயதுப் பெண் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது.
யுவராஜ் வேலைக்குச் சென்றபிறகு, கௌசல்யா வீட்டு வேலை களைச் செய்துகொண்டிருந்தார்.
அப்போது, வீட்டிற்குள் இருந்த மீன் தொட்டியில் குழந்தையின் விளையாட்டுப் பொருள் ஒன்று விழுந்துள்ளது.
அதனை எடுப்பதற்காக குழந்தை முயன்றபோது, அந்த மீன் தொட்டிக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது.
பத்து நிமிடத்துக்குப் பின்னர் அங்கு வந்த கௌசல்யா, குழந்தை மீன் தொட்டிக்குள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தை இறந்துவிட்டதை மருத்துவர்களும் உறுதிப்படுத்தினர்.

