சென்னையில் இரண்டு நாளில் 10 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னையில் இரண்டு நாளில் 10 கிலோ தங்கம் பறிமுதல்

1 mins read
dd5e0e0b-300d-4cac-859c-fd40a4bea845
-

சென்னை: சென்னை விமான நிலை­யத்­தில் கடந்த இரு நாள் களாக நடத்­தப்­பட்ட சோத­னையில் ரூ.4 கோடியே 68 லட்­சத்து 97 ஆயி­ரம் மதிப்­புள்ள 10 கிலோ 539 கிராம் தங்­கத்­தைச் சுங்­கத் துறை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

இது­தொ­டர்­பாக கொழும்­பில் இருந்து வந்த இரு பெண்­கள் உட்­பட 15 பேரைக் கைது செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

சென்னை மீனம்­பாக்­கம் பன்­னாட்டு விமான நிலை­யத்­துக்கு வெளி­நா­டு­களில் இருந்து வரும் விமா­னங்­களில் பெரு­ம­ள­வில் தங்­கம் கடத்தி வரப்­ப­டு­வ­தாக விமான நிலைய சுங்­கத் துறை முதன்மை ஆணை­யர் மேத்யூ ஜோல்­லிக்கு ரக­சி­யத் தக­வல் கிடைத்­தது.

இதை­ய­டுத்து, சுங்­கத் துறை அதி­கா­ரி­கள் முழு விழிப்பு நிலை­யில் இருந்து வந்­த­னர்.

இந்­நி­லை­யில், துபாய், அபு­தாபி, கொழும்பு, பேங்­காக்­கில் இருந்து சென்னை வந்த 15 பேரி­டம் நடத்­தப்­பட்ட சோத­னை­யில், ஏறக்­கு­றைய பத்து கிேலா தங்­கம் கைப்­பற்றப் பட்டது. சிலர், உள்­ளா­டைக்­குள் தங்­கத்தை மறைத்து கடத்தி வந்த தும் கண்டுபிடிக்கப்பட்டது.