சென்னை: நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய 'பிளாஸ்டிக்' பைகள், பொருட்களை பயன் படுத்த வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.
இது மட்டுமல்லாமல், தமிழகத்தில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'பிளாஸ்டிக்' பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் விமான நிலைய ஆணையகம், தனியார் அமைப்புடன் இணைந்து பயணிகள் மற்றும் ஊழியர்களிடம் ஒருமுறை பயன் படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது. 'பிளாஸ்டிக்' பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த பயணிகள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். பயணிகளும் துணிப் பைகளை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.

